Posts

Showing posts from July 6, 2022
Image
  அவிநாசி அரசுப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டம்! திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அரசுப்பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி நேற்று மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பள்ளி வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியில் உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாகவும், இதனால் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிகளுக்கு செல்வதாகவும் தெரிவித்தனர். எனவே பள்ளியில் விரைந்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியில் கூடுதலாக 2 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
Image
  அரசு ஐடிஐ-க்களில் சேர விண்ணப்பிக்கலாம்: கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), கோவை மற்றும் ஆனைகட்டி கட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது) ஆகியவற்றுக்கு நடப்பு கல்வியாண்டில் பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன், எம்எம்வி,பிட்டர், டர்னர், மெக்கானிஸ்ட், மெக்கானிஸ்ட் கிரைண்டர், வயர்மேன், வெல்டர் போன்ற பல்வேறு பிரிவுகளில் இருபாலருக்கும் ஆறுமாதம், ஓராண்டுமற்றும் இரண்டு ஆண்டுகள் பயிற்சிஅளிக்கப்படும் தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விருப்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 20-ம் தேதி இரவு 12 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்
Image
  தற்காலிக ஆசிரியர் நியமனம் - விண்ணப்பம் பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்! தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பான அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழங்கிய இடைக்கால தீர்ப்பாணையின்படி 22 மாவட்டங்களுக்கு மட்டும் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் பெற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது .  ஆனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தற்காலிக ஆசிரியர் நியானம் சார்பாக தடையாணை பெறப்பட்டுள்ளது . அத்தடையாணை துறையால் நீக்கப்பட்டவுடன் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக விண்ணப்பங்கள் பெறப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .  முதன்மைக் கல்வி அலுவலர்கள் . சென்னை  செங்கல்பட்டு  காஞ்சிபுரம்  திருவண்ணாமலை அரியலூர்  கோயம்புத்தூர்  கடலூர்  தருமபுரி  ஈரோடு கள்ளக்குறிச்சி திருப்பூர் , கிருஷ்ணகிரி  நீலகிரி ராணிபேட்டை  சேலம்  திருப்பத்தூர்  திருவண்ணாமலை  வேலூர்  விழுப்புரம்   பெரம்பலூர்  நாகப்பட்டினம்  மயிலாடுதுறை .
Image
  10,371 ஆசிரியர் , பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி , பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக், விரிவுரையாளர்கள் என 10,371 காலி பணியிடங்களை நடப்பு ஆண்டில் நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வானது ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நடைபெறும்.  155 SCERT விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பானது ஜூலை - 2022 மாதத்தில் வெளியிடப்படும். 1874 பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பானது டிசம்பர் - 2022 மாதத்தில் வெளியிடப்படும். 3987 இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பானது டிசம்பர் - 2022 மாதத்தில் வெளியிடப்படும். 1358 கல்லூரி உதவி பேராசிரியர்கள், 493 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் மற்றும் 97 பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பாணையானது அடுத்தடுத்து வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Image
  ஆகஸ்ட் 25 - 31 வரை டெட் தேர்வு முதல் தாள் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது . ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தாள் I வரும் ஆகஸ்ட் 25 முதல் 31ம் தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II 2022ம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி வரை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் Iக்கு 2,30,878 பேரும், தாள் IIக்கு 4,01,886 பேர் என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வு I மற்றும் தாள் II க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் வரும் 11ம் தேதி முதல் 16ம் ேததி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தகுதித் தேர்வுகளுக்கான தாள் I வரும் ஆகஸ்ட் 25 முதல் 31ம் வ