Posts

Showing posts from December 29, 2014
PG TRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி! தமிழகத்தில்,வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில்,முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில்,முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்.,சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில்,காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் ஜன., 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடக்கிறது. இத்தேர்வில்,பங்கேற்க,ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுகளுக்கு,தேர்வு மையங்கள் பார்வையிடல்,முதன்மை கண்காணிப்பாளர்கள்,கண்காணிப்பாளர்கள்,அறை கண்காணிப்பாளர்கள்,பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தேர்வில்,முறைகேடுகளை தவிர்க்க,ஆசிரியர் தேர்வு வாரியம் கெடுபிடியை அதிகரித்துள்ளது. சமீபத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது. கோவை மாவட்டத்தில்,முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வுக்கு18மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுமார்7