19 January 2022

 பாடக் குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித் துறை உத்தரவு



பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீதுமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள் ளது .


தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக் கும் , கற்றல் , கற்பித்தல் பணிகளை மேம்படுத்தவும் பல்வேறு செயல் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரு கின்றன .


அந்த திட்டங்களின் செயல்பாடுகள் , அரசுப் பள்ளிகளின் நிலை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் , கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது .


அதன்படி , பள்ளிக்கல்வி ஆணையர் க . நந்தகுமார் தலைமையில் விழுப்புரத்தில் மண்டல ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது .


அதில் விழுப்புரம் , கடலூர் , திருவண்ணாமலை , செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டன .


அப்போது , பல்வேறு ஆசிரியர்கள் முறையாக பாடக்குறிப்பேடு எழுதாமல் இருப்பது தெரியவந்தது .


இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணை யரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம் :


பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பாடக் குறிப்பேடு எழுதாமல் உள்ளனர் . சில பள்ளிகளில் ஆசிரியர் களுக்கு பாடம் நடத்தவே தெரியவில்லை . ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பாடம் நடத்துகின்றனர் . இதை மாற்றி அந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச அறிவுறுத்த வேண்டும் .


இதுதவிர , பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது தலைமை ஆசிரியர்கள் , அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .


பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தினமும் வளாகங்களை சுற்றிவந்து ஆய்வு செய்ய வேண்டும் . மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது , பாலியல் தொடர் பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


 கல்வித் தொலைக்காட்சி, அலைபேசி செயலி மூலமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தல்


கல்வித்தொலைக்காட்சி, அலைபேசி செய லிகள்வழியாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குகற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி யுள்ளது .


தமிழ்நாட்டில் கரோனா பரவல்காரணமாக 1 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு ஜன .31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது . இதையடுத்து , கல்வித் தொலைக் காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக் கப்பட்டு வருகின்றன . அதேநேரம் , பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12- ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை ஆக்கப்பூர்வ மாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந் தார் .


அதற்கேற்ப , அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் வாயிலாக 10. 12 ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன . இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது :


தனியார் பள்ளிகளில் கட்ட மைப்பு வசதிகள் இருப்பதால் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன .


அதேபோல , அரசுப் பள்ளி களில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி , அலைபேசி செயலிகள் மூலமாக கற்றல்பணி களை தொடர்ந்து மேற்கெள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது .


இதுதவிர 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் . அதன் பிறகு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகதளங்கள் வழியாக வாரம் தோறும் பாட வாரியாக குறுந் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் . குறுந்தேர்வில் மாணவர்கள் குறை வாக மதிப்பெண் பெறும் பகுதிகளை கண்டறிந்து ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .


இந்த பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகள் தொடர்ந்து கண்காணிப் பார்கள் .


இவ்வாறு அவர்கள் கூறினர் .

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...