Posts

Showing posts from September 6, 2022
Image
  நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதனால் பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை தள்ளிப்போகிறது. இந்நிலையில், எப்போது நீட் தேர்வு முடிவு வெளியாகும் என மாணவ-மாணவிகள் ஆவலோடு காத்திருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாளை (7-ந்தேதி) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவி
Image
  TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான கட் ஆப் எவ்வளவு? முழு விவரம் இதோ! தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் கட் ஆப் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. குரூப் 4 & VAO தேர்வு தமிழகத்தில் அரசுத்துறை உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. இந்த தேர்வானது பணிகளுக்கு ஏற்ப நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான 2, 2A தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 7301 காலிப்பணியிடங்களுக்கான இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் வரி தண்டலர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கான குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது. இந்த குரூப் 4 & VAO தேர்வுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 18.50 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதி உள்ளனர். இந்த தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு காலிப்பணிய
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வில் மீண்டும் குளறுபடியா... என்ன நடக்கிறது?! அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு தேர்வுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 11 முதல் 16-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வின் முதல் தாள் ஆகஸ்