Posts

Showing posts from July 2, 2022
Image
ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், வரும் 11ம் தேதி முதல் 16 ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
Image
  TNPSC, சீரூடைப் பணியாளர் தேர்வுகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு தொடர்பாக சர்ச்சை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், தமிழ்வழி இடஒதுக்கீடு என்பது முறையாக பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஏற்படும் சமவாய்ப்பின்மையை நீக்குவதற்காக, மாநில அரசு பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க, 2010-ஆம் ஆண்டில் தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்நிலையில், தமிழ்வழி இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதில், அரசு பணிகளில் இடஒதுக்கீட்டைப் பெற, ஒன்றாம் வகுப்பு முதல் தகுதிப்படிப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும், தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் அரசின் உதவித்தொகையை பெற்றிருப்பார்கள். எனவே, அந்த சான்றிதழை டிஎன்பிஎஸ்சி பெற்று இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியது. ஆனால், தேர்வர்களின் சந்தேகங்களை விளக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட "Frequently asked questions" என்ற ஆவணத்தில், உதவித்தொக
Image
  தற்காலிக ஆசிரியர் பணி - நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!! தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் 13000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற கிளை ஆணையிட்ட அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் முதல் ஜூலை 6ஆம் தேதி மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிட விபரங்கள் அனைத்தையும் அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும், சரி பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆறாம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  பள்ளிகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Image
  தகுதி தோ்வில் வெற்றி பெற்றவா்களின் இறுதிப் பட்டியல் தயாராகி வருகிறது. பட்டதாரி ஆசிரியா்கள் நியமன பட்டியல் வரும் பிப்ரவரி இறுதியில் வெளியிடப்படும் என்று  கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் நீலகண்டன். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ரவி என்பவா் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2009-ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த பின்னா் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் தமது சான்றிதழ்கள் 2014-ஆம் ஆண்டு சரிபாா்க்கப்பட்டது. அதன் பின்னா் இரண்டாம் நிலை ஆசிரியா் பணிக்காக காத்திருந்த தமக்கு 8 ஆண்டுகள் ஆகியும் தமக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் இரண்டாம் நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் 13,331 பேரை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய பள்ளி நிா்வாக குழு மூலம் நியமிக்க பள்ளி கல்வி ஆணையா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவா்கள் அனைவரும் 8 முதல் 10 மாத காலத்திற்கு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களும், சான்றிதழ் சரிபாா்ப்பு பணி முடிவடைந்தவா்களும் பணிக்காக காத்திருக்க கூடிய நிலையில் பள்ளி நிா்வாக குழு மூலம் ஆசிரியா
Image
  முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் சேர்கை.! ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம்.! முழு விவரம் உள்ளே. இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 -23-ம் கல்வியாண்டில் இளமறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஜூலை 27-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்பு கல்லூரிகளில் 2,148 இடங்களும், 28 இணைப்பு கல்லூரிகளில் 2337 இடங்களும் உள்ளன. 12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு போன்ற அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும். 12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் 971 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே விண்ணப்பத்தில் விருப்ப பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய முடி
Image
  TNPSC Group 1: வெளியான குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள்: எப்போது நேர்காணல்? எத்தனை பேருக்கு? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்வு செய்யப்படுவர்கள் ஜூலை மாதத்தில் நடைபெறும் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தமிழ்‌நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு - 1 (குரூப் - 1) முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நேர்காணல் தேர்வுக்கு 137 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர். இதில் முதன்மைத் தேர்வுக்கு 3,
Image
  2,381 சிறப்பு ஆசிரியர்களுக்கு காலிபணியிடங்கள் நியமனம்.! கல்வித்துறை இயக்குநர் தகவல்.! அங்கன்வாடி மையங்களில் நடப்பு கல்வியாண்டில் ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்; 2,381 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் LKG,UKG மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் பணிகளை தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பணி மாறுதல் வழங்கப்பட்டு கற்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைந்த பின்னர் 2021-ம் மே மாதத்திற்கு பின்னர் அரசுப்பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் 2.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் பணியிட மாற்றத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளிக்கு மாற்றம் செய்யப