Posts

Showing posts from September 5, 2022
Image
  காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! 01.09.2022 நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
Image
  அரசின் கட்டுப்பாட்டில் பள்ளிக் கல்வித்துறை இல்லை.. மூட்டைப் பூச்சிக்கு பயந்து.? பங்கப்படுத்திய ஓபிஎஸ். அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ததை திரும்பப் பெறுமாறு தமிழக அரசை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமெனில் அங்கு தொழிற்கல்வி வளர்ச்சி பெற வேண்டும், இப்படிப்பட்ட தொழிற்கல்விக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு முயற்சிப்பது வேதனை அளிக்கிறது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகளை அடியோடு மூட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அதன்மூலமாக தற்காலிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் உள்ள தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூடுமாறும் அங்கு 11ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப் பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்யுமாறும், அந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி வேறுபாடப்பிரிவுக்கு மாற்றுமாறும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனடிப்படையில்
Image
  ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் உள்ளிட்ட ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைகள் , புள்ளி விவரங்கள் தயார் செய்யும் பணியை குறைத்து கற்பிக்கும் பணியில் ஆசிரியர்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 2021-2022 ஆண்டிற்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது விழாவில் 393 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி கலந
Image
  கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீடிப்பு உதகை கூட்டுறவு சங்கங்களின் நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: 2022 -23ம்ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு (முழுநேரம்) விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் பெற கோயம்புத்தூரில் உள்ள ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் சென்று ரூ.100 செலுத்தி செப்.5ம் தேதி வரை விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வரும் செப்.7ம் தேதி மாலை 5.30 மணி வரை முதல்வர் ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், சாய்பாபா காலனி, கோவை என்ற முகவரிக்கு கொரியார் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0422 - 2442186 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Image
  நெட் தேர்விற்கான ஹால் டிக்கெட் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புகளுக்காக மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சிஎல்ஐஆர் நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு நாடு முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தேர்வு கால அட்டவணையை நேற்று என்டிஏ வெளியிட்டது. அதில் 8 பாடங்களுக்கான தேர்வுகள் வருகின்ற செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் ஹால் டிக்கெட் வருகின்ற 13-ஆம் தேதியில் வெளியிடப்படும். இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 011-40759000/011-69227700 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
Image
  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு 24 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு: இடம் கிடைக்காமல் காத்திருக்கும் மாணவர்களுக்கு நல் வாய்ப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்த காரணத்தினால் 24 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பி.காம், பி.ஏ. ஆங்கிலம் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு அதிக அளவில் போட்டி இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளை போலவே இந்த வருடமும் கலை அறிவியல் பாடப் பிரிவுகள் மீது இருந்த மோகம் குறையவில்லை. நடப்பாண்டில் அதிக பட்சமாக 4 லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மூலம் ஏழு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், 4 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 2.98 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தகுதியானதாக ஏற்று கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் கடந்த மாதம் கட் ஆப் மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை