Posts

Showing posts from May 1, 2023
Image
  NEET UG 2023; நீட் தேர்வு இயற்பியல் பிரிவில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? நீட் (NEET UG) தேர்வில் இயற்பியல் பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற விரும்புபவர்களுக்கு பலவிதமான கோட்பாடு மற்றும் கணித எண் சிக்கல்களின் ஈடுபாடு போன்றவை கடினமாக இருக்கலாம். நீட் தேர்வில் உயிரியல் முதன்மைப் பாடமாக இருக்கும் அதே வேளையில், எளிதான கற்றல் நுட்பம் உயிரியல் பாடத்தில் மாணவர்களுக்குப் பயனளிக்கும், ஆனால் இயற்பியல் பாடத்திற்கு ​​தயாரிப்புத் திட்டத்தில் நடைமுறை பயிற்சி சிறப்பாக இல்லாததால், பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அடிப்படைக் கருத்துகளைப் பயன்படுத்தும்போது, ​​உங்களுக்கு சிரமம் ஏற்படலாம். நீட் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது, எனவே புதிதாக படிப்பதற்கு நேரம் இல்லை. நீட் தேர்வின் இயற்பியலில் உள்ள அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கும் வகையில், மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் விரைவாகத் தங்கள் தயாரிப்புகளில் தங்கள் நிலையை தீவிரப்படுத்த வேண்டும். இதையும் படியுங்கள்: NEET UG 2023; நீட் தேர்வு வேதியியல் பிரிவில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? சரியான நேரத்தில் முழு பாடத்திட்டத்தையும் முழுமையாக உள்ளடக்கிய ஒரு திறமையான ம
Image
நீட் தேர்வில் வெற்றி பெற டிப்ஸ் 1.மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் இயற்பியல் (Physics)50, வேதியியல் (Chemistry)50, தாவரவியல் (Botany)50 மற்றும் விலங்கியல் (Zoology) 50 என அமைந்திருக்கும்‌. 2. ஒவ்வொரு  பாடத்திலும் பகுதி 'A' மற்றும் பகுதி 'B' என இரண்டு வகை இருக்கும். 3.'A' பகுதியில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். 4.பகுதி 'B' பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள 15 வினாக்களில் ஏதேனும் 10  வினாக்களுக்கு விடையளித்தால் போதும். 5 வினாக்கள் சாய்ஸ் ஆகும். 5.ஓவ்வொரு பாடத்திலும் உள்ள 'B'பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் ‌ஏனெனில் இவை அனைத்தும், சிந்தித்து விடை எழுதும் சிந்தனையை தூண்டும் திறனறி வினாக்கள் ( HOT -Higher Order Thinking Skills Questions)வகை ஆகும். எனவே மிகவும் கவனமாக இவ்வகை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும். 6.மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 200 வினாக்களில் 180 வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும். ஓவ்வொரு வினாவிற்கும்  4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண் ஆகும். 7. தவறான விடைகள் ஒவ்வொன்றிற்கும் 1 மதிப்பெண் கழி
Image
 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜேஇஇ முதல்நிலை தேர்வு கட்-ஆப் மதிப்பெண் உயர்வு! நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பில் சேர்வதற்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு என்ற பெயரில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ஜேஇஇ மெயின் எனப்படும் முதல்நிலை தேர்வில் தகுதி பெற வேண்டும். அந்த வகையில் வரும் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வை 11,13,325 பேர் எழுதினர். இதில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதுவதற்கு 2,51,673 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 2,685 பேர் மாற்றுத் திறனாளிகள். 98,612 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 67,613 பேர் ஓபிசி, 37,563 பேர் எஸ்.சி., 18,752 பேர் எஸ்.டி., 25,057 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினர் (இடபிள்யுஎஸ்) ஆவர். இந்த ஆண்டு பொதுப் பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 90.7 பர்சன்டைல் ஆகி உள்ளது. இது 2022-ல் 88.4, 2021-ல் 88.8, 2020-ல் 90.3 பர்சன்டைலாக இருந்தது. இதுபோல இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களின் கட்-ஆப் மதிப்பெண் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஓபிசி பிரிவினருக் கான கட்-ஆப் இ
Image
  தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கு 80,000 பேர் விண்ணப்பம்!! இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பதிவு துவங்கிய 10 நாளில் 80,000-க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில், ஆரம்ப நிலை வகுப்பில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்கள் ஏழை, எளிய குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி பயிலலாம். இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இதில் 10 நாட்களுக்குள்ளாக 80,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். மே 18ஆம் தேதி வரை பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  மின்சாரவாரிய வேலைகளுக்கு இனி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும்!? தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10,000த்திற்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள், ஜூனியர் அசிஸ்டன்ட், கள உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் முதல் முறையாக இந்த காலிப்பணியிடங்களை தேர்வு மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. மின்சாரத்துறைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு.. அதன்படி, மின்சாரத் துறையில் காலியாக உள்ள 10260 இடங்களில் முதற்கட்டமாக 200 டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் வழி, மின்சாரத்துறை பணிகளுக்கு முயற்சித்து கொண்டிருப்போர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பித்து பின்னர் முறையான தேர்வு, நேர்காணல் ஆகிய முறைகள் மூலமாகவே பணிக்கு தேர்வாக முடியும். தேர்வு குறித்த விரிவான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். விவரங்கள் குறித்த அப்டேட்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை கவனிக்கவும்.
Image
  12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் - அரசு கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தல்! தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் கணினி , தையல், இசை, தோட்டக்கலை கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகியவற்றில் தற்காலிக நிலையில் 12000 பகுதி நேர ஆசிரியர்கள் ரூபாய் பத்தாயிரம் தொகுப்பூதியத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். 12 ஆண்டாக பரிதவிக்கும் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பங்களின் எதிர்காலம் மேம்பட மனிதாபிமானத்துடன் தி.மு.க தேர்தல் வாக்குறுதி 181 -ஐ நிறைவேற்ற வேண்டி வருகிறோம். மே மாதம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கிடைத்திட தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.