Posts

Showing posts from September 25, 2022
Image
  பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடுகளைத் தடுக்க பணியாளர்களை மாற்றம் செய்ய உத்தரவு. பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'பள்ளிக்கல்வித்துறையில் ஜூன் 1ஆம் தேதி , மூன்று ஆண்டுகட்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு மாவட்ட அளவில் முதன்மைக்கல்வி அலுவலர் அளவிலேயே கலந்தாய்வு நடத்திட வேண்டும்.  மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, மாறுதல் பெற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். ஜூன் 1ஆம் தேதி நிலையில் பிற அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைச்சு, பொதுப் பணியாளர்களைத் தங்கள் மா
Image
  திட்டமிட்டபடி நாளை காலாண்டு தேர்வு.. கல்வித்துறை அறிவிப்பு..! புதுச்சேரி மற்றும் காரைக்காலில் திட்டமிட்டப்படி காலாண்டு தேர்வுகள் நாளை தொடங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அத்துடன், நாளை (செப்.26-ம் தேதி) முதல் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்தது. ஆனால், புதுவையில் நாளை ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார விடுமுறைக்கு பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. திட்டமிட்டப்படி காலாண்டு தேர்வுகளும் நாளை தொடங்கும். தேர்வுகள் வருகிற 30-ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிந்த பிறகு ஒரு வாரத்துக்கு
Image
  4000 உதவி பேராசிரியர்கள் கல்லூரிகளில் நியமிக்க முடிவு - 10 நாட்களில் அறிவிப்பு அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பதவிகளில், 4,000 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, 10 நாட்களில் வெளியிடப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி:கடந்த, 2012ல் நியமிக்கப்பட்ட, 955 அரசு கல்லுாரி ஆசிரியர்கள், அவர்களின் பயிற்சி காலத்தை தவிர மற்ற ஆண்டுகளுக்கு, பணி வரன்முறை செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அரசு பல்கலைகளின் கீழ் செயல்பட்ட, 41 உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாற்றப்படும் என, கடந்த ஆட்சியில் அறிவித்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.தற்போது, அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட கல்லுாரிகளின் செலவினத்துக்கு, அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றுவோருக்கு உயர் கல்வி துறை வழியாக ஊதியம் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நியமன அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., 10 நாட்களில் வெளியிடும்.இதில் தேர்ச்சி பெ