Posts

Showing posts from April 11, 2023
Image
  தேவையா பிளஸ் ஒன் பொதுத் தேர்வு? தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு புதிய முயற்சிகள் உற்சாகத்துடன் திட்டமிடப்படுகின்றன. அக்கறையுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பொறுப்புடன் கண்காணிக்கப்படுகின்றன. களத்தில் நிகழும் குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன. மீளாய்வுகள் செய்யப்படுகின்றன. சரிப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாராட்டுக்குரியவை இவை. பொதுக் கல்வியில் அக்கறை கொண்ட கல்வியாளர்களை, வல்லுநர்களை, கலைஞர்களை, செயல்பாட்டாளர்களைப் பள்ளிக் கல்வித் துறை தனது குடையின் கீழ் ஒருங்கிணைத்துக் கல்விப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதுவும் நம்பிக்கையூட்டும் அம்சம்தான். கருத்து வெளிப்பாடு அவசியம்: இதில் சில விலகலை, சறுக்கலை, முரண்களை, அபத்தங்களைக் கவனப்படுத்த வேண்டியது, தரமான பொதுக் கல்வியில் நம்பிக்கை கொண்டவர்களின் கடமையாகிறது. ஏனெனில், நமது பள்ளிக் கல்வித் துறை நிர்வாகக் கட்டமைப்பு வேடிக்கையானது. இதன் அதிகாரப் படிநிலை மேலே இருப்பவர்களுக்கு வாயையும் கீழே இருப்பவர்களுக்குக் காதுகளையும் ஒதுக்கீடு செய்துள்ளது. வாய் அருளப்பட்டவர்களுக்குக் காதுகள் அவசியமில்லை. இது முதல் விதி. காதுகள் விதிக்க
Image
  TNPSC : குரூப் - 4 சான்றிதழ் பதிவு மெமோ வெளியீடு. கடந்த ஆண்டு ஜூலையில், அரசு துறையில் 10 ஆயிரத்து, 117 காலியிடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வு, நடந்தது. டி.என்.பி.எஸ்.சி., நடத்திய இந்த தேர்வில், 18 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு மார்ச், 24ல் வெளியானது. தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து, சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான 'மெமோ' என்ற நினைவூட்டல் கடிதத்தை, இணையதளத்தில் தேர்வர்களின் பெயரில், டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. பட்டியலில் பதிவெண் கொண்டவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை 'ஸ்கேன்' செய்து, 'இ - சேவை' மையம் வழியே, வரும், 13ம் தேதி முதல் மே, 5க்குள் பதிவேற்ற வேண்டும்.
Image
  யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு சிஎஸ்ஐஆர் என்று கூறப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை பெற நெட் தேர்வு எழுதப்படுவது வழக்கமானது.  இந்த நிலையில் இந்த தேர்வு ஜூன் மாதம் 6, 7, 8 ஆகியது மூன்று நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் முறையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு குறித்து விவரங்களுக்கு https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பார்க்கலாம்.
Image
  13,500 பேர்.. தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. இதனை எதிர்த்த வழக்கில் மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடரும்வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள் எனக்கூறி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாட்டில் திமுக அரசு சார்பில் மக்கள் நலப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் 13,500 பேரை கடந்த 2011ம் ஆண்டு அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால் அப்போதைய அதிமுக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இ