Posts

Showing posts from April 19, 2013
இரட்டைப் பட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத்தடை விதித்த தீர்பு நகல் click here to download the Judgement copy.  soon clear copy will be updated
குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி  சென்னை: டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடத்திட்ட விவரங்களை, அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன், நேற்று வெளியிட்டார். குரூப்-2 முக்கிய தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, கட்டுரைப் பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. தேர்வாணைய முன்னாள் தலைவர், நடராஜ் அறிமுகப்படுத்திய புதிய பாடத்திட்டத்தில், தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக, கருணாநிதி, ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் குறை கூறினர்.  இதையடுத்து, "தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் தரப்படும்" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார். இதைத் தொடர்ந்து, நடராஜ் கொண்டு வந்த பாடத் திட்டத்தில், மாற்றம் செய்து, தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், திருத்தம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டது.  திருத்தப்பட்ட புதிய பாடத்திட்ட விவரங்களை, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், நேற்று மாலை அறிவித்தார். அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பழைய பாடத்திட்டத்தை மாற்றி, புதிய பாடத்திட்டம், கடந்த மார்ச், 12ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பாடத்திட்டத்தில், தமிழுக்கு ம
20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி   சென்னை: சென்னை மாநகராட்சியின், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியும், புதிதாக, 10 மழலையர் பள்ளிகளும் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியில், பல்வேறு நிலைகளில், 284 பள்ளிகள் உள்ளன. 95 ஆயிரம் மாணவர்கள் அவற்றில் படிக்கின்றனர். 99 ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், மேலும், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படும் வகையில், முதல் வகுப்புகள் துவங்கப்படும் எனவும், 10 இடங்களில், மழலையர் பள்ளிகள் துவங்கப்படும் எனவும், மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.  இதன்படி, வரும் கல்வியாண்டு முதல் இந்த பள்ளிகள் செயல்பட உள்ளன. பள்ளிகள் அமையும் இடங்களை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கிய உடன், இதற்கான சேர்க்கை நடக்கும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. புதிய ஆங்கில வழி பள்ளிகள், மழலையர் பள்ளிகள் பழைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே துவங்கப்பட்டுள்ளன. விரிவாக்க பகுதிகளில் இந்த பள்ளிகள் துவங்கப்படவ