Posts

Showing posts from September 14, 2022
Image
  தமிழக சிறைத் துறையில் வேலை.. TNPSC வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..  தமிழக சிறை துறையில் காலியாக உள்ள சிறை அதிகாரி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவித்துள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு, பிற்பகல் தமிழ் தகுதி தேர்வு மற்றும் பொது பாட தேர்வு நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 13ஆம் தேதி கடைசி நாளாகும். மொத்தம் 680 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இது குறித்த மேலும் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Image
  காவல்துறையில் காலியாக உள்ள 3,552 2ம் நிலை காவலர் பணிக்கு நவ.27ம் தேதி எழுத்து தேர்வு: சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு காவல்துறையில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வரும் நவம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம், பொது தேர்வு 2022க்கான 3,552 இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கான அறிக்கை வெளியிடப்படுகிறது.  இந்த தேர்விற்கான விண்ணப்பிக்கும் தேதி மற்றும் கடைசி நாள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து எழுத்து தேர்வு வரும் நவம்பர் 27ம் தேதி தமிழ் மொழி தகுதி தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு தேர்வு நடைபெறும் மையத்திற்கு அனைவரும் வரவேண்டும். தேர்வு நேரம் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.40 மணி வரை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.