Posts

Showing posts from July 19, 2016
ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் சான்றுகள் மட்டும் ஏற்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை யாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அனைத்து அசல் சான்றிதழ் களையும் சமர்ப்பித்தால் மட்டுமே பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 விரிவுரையாளர், இளநிலை விரிவு ரையாளர், முதுநிலை விரிவு ரையாளர் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.எழுத்துத் தேர்வு செப்டம்பர் 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 15-ம் தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் டி.உ
விரைவில் 1,120 விரிவுரையாளர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக தேர்வு. அரசு பாலிடெக்னிக் கல்லூரி களில் விரைவில் 1,120 விரிவுரை யாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக் னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. உதவி பேராசிரியர், விரிவுரையாளர் பணியில் சேர முன்பு வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. ஆனால், பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு வயது வரம்பு கட்டுப்பாடு விதித்து 139 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டது. கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கு வயது வரம்பு விதிக்கப்படாத நிலையில் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கு மட்டும் வயது வரம்பு கொண்டு வரப்பட்டதற்கு கடும் எதிர்