Posts

Showing posts from October 28, 2014
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு. மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் . அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.அவரிடம் பிடித்தம் செய்த தொகை -ரூபாய் -2,91,900/-இவரை போல பல பேர் இன்னும் ஓய்வூதியம் பெறாமல் உள்ளனர். இந்த தீர்ப்பை வைத்து பல வழக்கு தொடர்ந்தால் ஓய்வூதியம் பெற முடியும் . தகவல்: திரு.பிரெடெரிக் எங்கெல்ஸ் தொடர்புக்கு-engelsdgl@ gmail.com, cpsteam2013@ gmail.com
5% மதிப்பெண்தளர்வு ரத்து செய்யப்பட்ட பின்பும் பணிநியமனம் நடைபெறுவதாக நீதிமன்றத்தில் வழக்கு  அரசாணை எண் 25 ரத்து செய்யப்பட்ட பின்னும் அதன் படி பணி நியமனம் நடைபெறுவதாக உசிலம்பட்டியை சேர்ந்த ஜீவரத்தினம் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து பள்ளிகல்விதுறை இயக்குனர்; செயலாளர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.