19 June 2022

 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி நாளை அறிவிப்பு.



10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நாளை சென்னையில் வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ். இணையதளங்கள், பள்ளிகள், SMS, பொது நூலகங்களில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 


11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கபௌபட்டுள்ளது.

 கரோனாவால் தொடரும் நிதி நெருக்கடியை சமாளிக்க புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை




நிதி நெருக்கடியை சமாளிக்க பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



புதுச்சேரியில் 283 அரசுப்பள்ளிகளும், 32 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 181 தனியார் பள்ளிகளும் உள்ளன. மொத்தமுள்ள 57 சதவீத அரசுப் பள்ளிகளில் 32 சதவீத மாணவர்களே படிக்கின்றனர். மேலும், அரசுப் பள்ளிகளில் கிட்டத் தட்ட 3 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். எனினும் அதிகளவில் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் படித்து வந்தனர்.


இச்சூழலில், கரோனா தாக்கத் தால் பள்ளி, கல்லூரி மூடப்பட்டு இரு ஆண்டுகள் ஆன்லைனில் வகுப்புகள் நடந்தாலும், கடந்த கல்வியாண்டு இறுதியில் பள்ளிகள் செயல்படத் தொடங்கின.


புதுச்சேரியில் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 23-ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள் ளன.


இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. நகரப் பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகளவில் சேருகின்றனர். ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை மாற்றுச் சான்றிதழ், தேர்ச்சி சான்றிதழ் தேவையில்லை என்பதால் எளிதில்மாணவர் சேர்க்கை நடக்கிறது.


இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் கூறுகையில், 'கரோனா பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போதுதான் மீண்டு வருகிறோம். கடனை செலுத்த வேண்டியுள்ளது. தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருப்பதால் அரசுப் பள்ளிகளை நாடுகிறோம். தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டம் 5-ம் வகுப்பு வரை உள்ளது. ஆறாம் வகுப்பிலிருந்து விரைவில் அமல்படுத்த உள்ளதாக கூறுவதால் சேர்க்கின்றோம்' என் றனர்.


புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் அதிகளவில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள் ளதுடன் சேர்க்கை அதிகளவில் உள்ளதாகவும், கடந்தாண்டை விட அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எவ்வளவு குழந்தைகள் நடப்பாண் டில் இணைந்துள்ளனர் என்பதை சேர்க்கைக்கு பிறகே தெரிவிக்க இயலும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


கல்வி சார்ந்த பணிகளில் இயங்கும் சமூக அமைப்பினர் கூறுகையில், 'கரோனா சூழலைத் தொடர்ந்து பலரும் பொருளாதார பாதிப்பினால் அரசுப் பள்ளிகளை நாடுகின்றனர்.


புதுச்சேரியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்விக்கான நிதியை அரசு அதிகப்படுத்த வேண்டும். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், தேவையான பாட ஆசிரியர்கள், இசை ஓவியம் போன்ற கலை ஆசிரியர்கள் இல்லை. விடுப்பில் போகும் ஆசிரியர்களுக்கு மாற்று ஆசிரியர்கள் இல்லை. முக்கியமாக 10, 11, 12-ம்வகுப்புகளில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஆசிரியர்கள் பணியிடங்களை உறுதிப்படுத்த வேண்டும். கல்வித்துறையானது விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்' என்று குறிப் பிடுகின்றனர்.

 மின்வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்"- அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!




தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிரப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில்,அதனை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார்.


இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்: "தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன எனவும்,சென்னையில் தொடங்கப்பட்ட மின்னகம் மூலம் அப்புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாகவும்,ஒரே நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகள் வந்தாலும்,அதை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.


இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி:"கடலில் காற்றாலை தயாரிக்கும் பணி தொடர்பாக 5 நாள் அரசு முறை பயணமாக இன்று ஸ்காட்லாந்து,லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட குழுவாக செல்லவுள்ளோம்", என கூறினார்.


மேலும்,தமிழ்நாடு மின்வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு



தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது.


அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 17 லட்சத்துக்கு 92 ஆயிரத்து 450 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இவர்களில் சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளே தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது.அந்த வகையில் அவர்களின் விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, கடந்த 1-ந்தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அதன்படி, கடந்த 9-ந்தேதியுடன் அந்த பணிகளும் முடிந்தது . இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளன.


அதன்படி பிளஸ் 2- தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும், 10-ம் வகுப்புதேர்வு முடிவுகள் மதியம் 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் சென்று தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

 இடைநிலை ஆசிரியா்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுமா? ஆசிரியா்கள் எதிா்பாா்ப்பு



இடைநிலை ஆசிரியா்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு நடப்பாண்டில் நடத்தப்படுமா ?என ஆசிரியா்கள் எதிா்பாா்பில் உள்ளனா்.


கரோனா அலை பரவியதையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் முறையாக செயல்படவில்லை. இந்நிலையில் கரோனா அலை குறைந்ததும் கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் பள்ளி, கல்லூரி செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் ஆசிரியா்கள் பதவி உயா்வு மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டதும் பதவி உயா்வு மற்றும் இடமாறுதல் உள்ளிஙிட்ட அனைத்து கவுன்சிலிங்களை நடத்திட வேண்டும் என ஆசிரியா்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.


இதையடுத்து கடந்த மாா்ச் மாதம் அனைத்து ஆசிரியா்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் மழை சுழற்சி மாறுதலில் குழப்பம் நிலவியதால் ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு நடத்துவது நிறுத்தம் செய்யப்பட்டு பின்னா் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் இடைநிலை ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படவில்லை. ஆனால் அதன்பின் பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டது.


அதன்பின் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி திறக்கப்பட்டதும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்திட அறிவிப்பு வெளிவரும் என ஆசிரியா்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.


தற்போது மலை சுழற்சி பணி மாறுதல் பிரச்னை தீா்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு நடப்பு ஆண்டில் நடத்தப்படாமல் போய் விடுமோ என ஆசிரியா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.


இதுகுறித்து ஆசிரியா் ஒருவா் கூறுகையில், கடந்த திமுக ஆட்சியில் மாநில சீனியாா்ட்டி படி 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியா் பணி நியமனம் செய்யப்பட்டனா். இதில் தென் மாவட்டங்களை சோந்த பலா் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா், பெரம்பூா், காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நியமிக்கப்பட்டனா். அவா்கள் சொந்த மாவட்டத்துக்கு திரும்ப தருணம் எதிா்பாா்தது காத்திருக்கின்றனா்.


கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தேவையான ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆசிரியா் பணியிடம் காலியாக உள்ளதால் பல மாவட்டங்களுக்கு முறையாக கலந்தாய்வு நடத்தப்படவில்லை. கடந்த 5ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியா்கள் கலந்தாய்வு முறையாக நடத்தப்படவில்லை. இதனால் ஆசிரியா்கள் சீனியாா்ட்டி காத்திருப்பு பட்டியலில் முறையான இடம் கிடைக்காமல் வெளி மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்கள் சொந்த மாவட்டத்துக்கு திரும்புவதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.


கடந்த ஆட்சியில் சிலா் சிபாரிசுடன் அதிக பணம் கொடுத்தும் இடமாறுதல் பெற்றுள்ளனா். ஆனால் தற்போதைய புதிய அரசும் பல பணியிடங்களை நிரப்பாமலும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் கலந்தாய்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவது ஆசிரியா்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருகிறது. ஆதலால் ஆசிரியா்களின் நிலையை உணா்ந்து தமிழக முதல்வா் ஸ்டாலின் , மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்திட ஆவண பிறபிக்க வேண்டும். தேவையான பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக சொந்த மாவட்டத்துக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் ஆசிரியா்களுக்கு சொந்த மாவட்டம் திரும்பும் வகையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஆணை பிறபிக்க வேண்டும் என்றாா்.


ஆசிரியா்களுக்கான பணி மாறுதல் கவுன்சிலிங் அனைத்து பிரிவுகளுக்கும் முடிந்த நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வு நடத்திட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஆசிரியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.



 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...