Posts

Showing posts from August 9, 2013
பி.எட் ..,தேர்வில் தோல்வியடைந்து பின் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு             பி.எட்., தேர்வில் தோல்வியடைந்து, பின் வெற்றி பெற்றவருக்கு, ஆசிரியர் தகுதி சான்றிதழ் வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  கடந்த ஆண்டு, ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், வினோத்குமார் என்பவர் கலந்து கொண்டார். விளக்க குறிப்பேட்டின்படி, பி.எட்., அல்லது ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ இறுதி ஆண்டு தேர்வை எழுதுபவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியும். வினோத் குமாரைப் பொறுத்தவரை, பட்டப் படிப்பு முடித்த பின், பி.எட்., இரண்டாம் செமஸ்டர் தேர்வு எழுத இருந்தார். இதற்கிடையில், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, 93 மதிப்பெண் பெற்றார். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால், அதாவது, 90 மதிப்பெண் பெற்றால், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவர்.  வினோத்குமார், 93 மதிப்பெண் பெற்றதால், தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டார்; ஆனால், பி.எட்., தேர்வில், வினோத்குமார் வெற்றி பெறவில்லை. எனவே, கடந்த ஆண்டு, மே மாதம் நடந்த, பி.எட்., தேர்வில், வினோத்குமார் தேர்ச்சி ப