Posts

Showing posts from February 17, 2024
Image
  திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?அன்புமணி சந்தேகம். தமிழ்நாட்டில் திமுகவின் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா?, இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டானிகுக்கு பா.ம.க.தலைவர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  dmk government provided 60567 employment in 3-years, Anbumani ramadoss seeking white paper report…தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.  சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும் போது முதலமைச்சர் தெரிவித்த இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு தான் என்றாலும் கூட, உண்மையாகவே இவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், முதலமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் உள்ள முரண்பாடுகள் தான்
Image
 புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை மூலம் வேலைவாய்ப்பு 
Image
  ஒப்புதல் தந்த ஆளுநர்.. டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 5 பேர் நியமனம்! யார் இவர்கள்? தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் செய்ய ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து 5 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்கள் யார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்வுகள், நேர்க்காணல் நடத்தி இந்த தேர்வாணையம் அரசு பணிக்கு ஆட்களை சேர்த்து வருகிறது. டிஎன்பிஎஸ்சியை பொறுத்தமட்டில் ஒரு தலைவர், 14 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால் நீண்டகாலமாக டிஎன்பிஎஸ்சிக்கு தலைவர் இல்லாத நிலை இருந்தது. மேலும் 14 உறுப்பினர்களுக்கு பதில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். இதனால் டிஎன்பிஎஸ்சியின் செயல்பாடு மிகவும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதாவது போட்டி தேர்வில் குளறுபடி, தேர்வு முடிவுகளில் காலதாமதம் செய்தல் உள்ளிட்டவை ஏற்பட இதுவே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
Image
  தேர்தல் நடத்தை விதிகளால்.. போட்டித்தேர்வு நடத்துவதில் தாமதமா? டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன? லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் எந்த விதத்திலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பாதிக்கப்படாது என டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற இருக்கிறது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால், புதிய திட்டங்களையோ, அறிவிப்புகளையோ வெளியிட வேண்டும் என்றால் அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று விட்டு தான் அறிவிப்பினை வெளியிட முடியும். தேர்தல் அறிவிக்கை வெளியாகிவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால், அரசின் செயல்பாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் என்பதும் அமலுக்கு வந்துவிடும். எனவே தற்போது அரசு வேலைக்காக தேர்வுகளுக்கு படித்து வரும் தேர்வர்கள், லோக்சபா தேர்தலால் தேர்வுகள் தள்ளிப்போய்விடுமோ என அச்சமடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ப
Image
 "ஜூன் மாதத்திற்குள் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்" அடுத்த 2 ஆண்டுகளில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள 50,000 இடங்களும் நிரப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 1,508 இளைஞர்களுக்கு, பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர், அடுத்த 2 ஆண்டுகளில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள 50,000 இடங்கள் நிரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதில், இதில், ஜூன் மாதத்திற்குள் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்க செய்வது தான், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பிரதான நோக்கம் என்று முதலமைச்சர் கூறினார். இத்திட்டத்தின் மூலம் கடந்த 30 நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு சேவை கிடைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Image
  நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க போறீங்களா.? என்னென்ன ஆவணங்கள் தேவை.? முக்கிய அறிவிப்பு.!! நீட் தேர்வானது மே மாதம் 5ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் neet.ntaonline.in என்ற இணையதளம் மூலம் பூர்த்தி செய்து வருகிறார்கள். விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் மார்ச் 9ஆம் தேதி. இதற்கு முன்னதாக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம். அதன்படி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட சான்றிதழ்களை மாணவர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். மாணவர்களின் தற்போதைய பாஸ்போர்ட் மற்றும் போஸ்ட்கார்டு அளவிலான புகைப்படங்களும், அதில் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதியும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.