6 February 2015

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜனவரி 10ம் தேதி நடந்த தேர்வு முடிவுகள் டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம். இந்த தேர்வை சுமார் 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதியிருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குஅழைக்கப்படுபவர்களின் விபரமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழகஅரசின்பல்வேறுதுறைகளில்12லட்சத்துக்கும்மேற்பட்டஊழியர்கள்,அலுவலர்கள்பணிபுரிந்துவருகிறார்கள்.அரசுஊழியர்களும்,ஆசிரியர்களும்பணியிலிருந்துஓய்வுபெறுவதற்கு5ஆண்டுகளுக்குமுன்னரேஅவர்களைப்பற்றியமுழுவிவரங்கள்அடங்கியபட்டியல்துறைவாரியாகதமிழகஅரசின்நிதித்துறைக்குஅனுப்பப்படும்.ஓய்வுபெறும்ஊழியர்களுக்குவழங்கவேண்டியபணிக்கொடை(கிராஜுவிட்டி)உள்ளிட்டபணப்பயன்கள்குறித்துமுன்கூட்டியேதிட்டமிட்டுபட்ஜெட்டில்நிதிஒதுக்கவேண்டியதிருப்பதால்இந்தஏற்பாடுசெய்யப்படுகிறது.

அரசுப்பணியாளர்கள்டிஎன்பிஎஸ்சிபோட்டித்தேர்வுமூலமாகவும்,ஆசிரியர்கள்டிஆர்பிஎனப்படும்ஆசிரியர்தேர்வுவாரியத்தின்மூலமாகவும்தேர்வுசெய்யப்படுகிறார்கள்.மேலும்,வேலைவாய்ப்புஅலுவலகபதிவுமூப்பு(சீனியாரிட்டி)மற்றும்கருணைஅடிப்படையிலும்பணிநியமனம்நடைபெறுகிறது. இந்தநிலையில், 2015-16-ம்நிதிஆண்டில்அரசுஊழியர்கள்,அலுவலர்கள்மற்றும்ஆசிரியர்களில்ஏறத்தாழ24ஆயிரம்பேர்ஓய்வுபெறஇருப்பதாகநிதித்துறையின்உயர்அதிகாரிஒருவர்தெரிவித்தார்.காவலர்,அலுவலகஉதவியாளர்தொடங்கி,குரூப்-சிபணியாளர்கள்,குரூப்-பி,குரூப்-ஏஅலுவலர்கள்,ஆசிரியர்கள்,கல்லூரிபேராசிரியர்கள்எனஅனைத்துவகைஊழியர்களும்இதில்அடங்குவர்.ஒரேஆண்டில்இவ்வளவுபேர்ஓய்வுபெறுவதுஅரிதானஒன்றாகும்.

பொதுவாக,அரசுப்பணியில், 50சதவீத காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படும். அந்தவகையில், 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல் இருப்பதால் படித்தஇளைஞர்களுக்குஅதிகவேலைவாய்ப்புஏற்படும்.இதற்காகடிஎன்பிஎஸ்சிமற்றும்ஆசிரியர்தேர்வுவாரியம்மூலமாகஅதிகளவில்பணிநியமனங்கள்நடைபெறும்.இந்தஆண்டு10ஆயிரத்துக்கும்மேற்பட்டகாலியிடங்கள்நிரப்பப்படும்என்றுடிஎன்பிஎஸ்சிதலைவர்(பொறுப்பு)சி.பாலசுப்பிரமணியன்அண்மையில்அறிவித்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.

காவலர்,அலுவலக உதவியாளர் தொடங்கி,குரூப்-சிபணியாளர்கள்,குரூப்-பி,குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவுபேர் ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாகும்.


கூட்டுறவுச் சங்கங்களில் 3,500 உதவியாளர் பணியிடங்கள்: சான்றிதழ்களை பிப்ரவரி 19-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், உரிய சான்றிதழ்களை வரும் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மாநில தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள 3 ஆயிரத்து 589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

இதனுடைய முடிவுகள் அன்றைய மாதம் 20-ஆம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 21 முதல் 30 வரையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்த நிலையில், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், கடந்த 3-ஆம் தேதியன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

. நேர்முகத் தேர்வின் போது, சில விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களை அளிக்கவில்லை. அந்த விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை அளிக்க வரும் 19-ஆம் தேதி கடைசியாகும். இதுதொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு கடிதங்கள் மூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது, சரியான தகுதி பெறாததால் ஒரு சில விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர்கள் முறையீடுகள் ஏதேனும் சமர்ப்பிக்க விரும்பினால் மாநில தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்குத் தெரிவிக்கலாம்.

சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், முறையீடு தெரிவிக்க விரும்புபவர்கள் வரும் 19-ஆம் தேதிக்குள், மாநில ஆள்சேர்ப்பு நிலைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், 170, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரியில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...