Posts

Showing posts from May 22, 2022
Image
  பள்ளி மாணவர்களுக்கு வேளாண் பயிற்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் நெல் பாதுகாப்பு மையம் சார்பில் 2 நாள் தேசிய அளவிளான நெல் திருவிழா நேற்று துவங்கியது. இதில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: கடந்த ஆட்சி காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா அறிவிக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு செயல்பாடும் இல்லை. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வேளாண்மை பாதுகாப்பு மண்டல குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் விளைநிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி விளை நிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது. விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்டு அதில், எது தேவையோ அதை அரசு செயல்படுத்தி வருகிறது.  பள்ளி அளவில் விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் பசுமை படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலம் காய்கறிகள் விளைவிப்பது போன்ற விவசாய பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வா
Image
 ' தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி: புதுச்சேரியில் 28ல் துவக்கம் தினமலர்' நாளிதழ் மற் றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரியில் வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கின்றது. சித்தன்குடி பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் கல்யாண மண்டபத்தில் தினமும் காலை 10;00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவன ஸ்டால்கள் இடம் பெற உள்ளன.  உயர்கல்விக்கான அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களையும் அங்கு பெறலாம்.என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டும் இந்த மெகா கல்வித்திருவிழாவில், 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசகர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களில் 'அட்மிஷன்' நடைபெறுவது எப்படி, எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள் எவை, வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் எவை என்பது குறித்து இந்நிகழ
Image
  குரூப்-2 தேர்வர்களுக்கு.. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!!!! தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல என டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2,2A தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில்தேர்வு எழுதினர். இந்நிலையில் தற்போது தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல என்றும் இன்னும் 5நாட்களில் Tentative Answer Key வெளியிடப்படும் என்றும் தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன் பிறகு தான் வல்லுநர் குழு கூடி விடைகளை இறுதி செய்யும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
Image
  School Reopen: 'சும்மா சும்மா லீவா? ஜூன் மாதமே பள்ளிகளை திறங்க' - காரணங்களை அடுக்கும் தனியார் பள்ளிகள் சங்கம்  ஜூன் மாதமே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை விடுமுறை என்று நாள்தோறும் விடுமுறை கேட்பது எந்த வகையில் நியாயம்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தமிழக முதல்வருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ''தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பொதுத் தேர்வு முடிந்து மே 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 31ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிந்து சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்குச் செல்ல உள்ளனர். மீதமுள்ள ஆசிரியர்கள் ஓய்வில்தான் இருப்பார்கள். இதனால், அரசு அறி
Image
  TNPSC குரூப் 4 தேர்வு என்றால் என்ன?... "குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது".. முழு விவரம் இதோ...!!!! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு என்றால் என்ன ?இது எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது என்பது தொடர்பான முழு விவரங்களை இந்த தொகுப்பில் நாம் காணலாம். தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகின்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்கள் 9 லட்சத்து 26 ஆயிரத்து 553 பேரும், பெண்கள் 12 லட்சத்து 58 ஆயிரத்து 616 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 129 பேரும் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வு என்றால் என்ன? இது எந்த பதவிகளுக்கான நடத்தப்படுகிறது? என்பதை பற்றி உங்களுக்கு தெரியாது என்றால், இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். டிஎன்பிஎஸ்சி என்பது தமிழக அரசு பணிக்கு தேவையான நபர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்ப