Posts

Showing posts from July 30, 2022
Image
  அரசு கல்லூரி தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை அரசு கல்லூரி தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2022-23ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இப்பள்ளிகளில் 3,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அரசுப்பள்ளிகளில் அறிவியல், கணிதம், ஆங்கிலம், கணிதம் என பல்வேறு பாடங்களில் பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பணி நியமனம் என்றால் முழுமையாக காலி பணியிடங்களை நிரப்ப முடியாத நிலையை தவிர்க்க முடியாது என்று ஆசிரியர் சங்கங்கள் வேதனை தெரிவித்து வந்தன. இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தின
  இனி 10 பைசா செலவில்லாமல் PG படிக்கலாம்... UGC அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி! நாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020 நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், தற்போது டிஜிட்டல் பாட உள்ளடக்கத்திற்கான புதிய போர்டல் (e-content) பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவர்களின் உள்ளூர் மொழிகளில் டிஜிட்டல் பாட திட்டங்களை கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து UGC இந்த போர்டல் உருவாக்கியுள்ளது. மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் பல்வேறு படிப்புகளுக்கான வகுப்புகளை ஆன்லைன் வழியாக பெற முடியும். இது குறித்து, யுஜிசி தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ்குமார் கூறியதாவது., "உயர்கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் டிஜிட்டல் வளங்களை வழங்க யுஜிசி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. யுஜிசியின் மின் உள்ளடக்கத்தை ஒருங்கிணைக்க மின்னணு மற்றும் த
Image
  1.20 லட்சம் இடங்கள், 4.07 லட்சம் பேர் விண்ணப்பம்: கல்லூரி சேர்க்கையில் உள்ள சிக்கல் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 4.07 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், கல்லூரி சேர்க்கையில் உள்ள சிக்கலை அரசு எப்படி சமாளிக்க போகிறது என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றுக்கு 4.07 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2.98 லட்சம் விண்ணப்பங்கள் தகுதியானவை. கடந்த ஆண்டை விட கூடுதலாக 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்! கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், பலருக்கு தனியார் கல்லூரிகளில் சேர வசதி இல்லை. அவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவதும், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருப்பதும் தான் விண்ணப்பங்கள் அதிகரிக்கக் காரணம் ஆகும் பொருளாதார வசதியற்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டால், அவர்களால் கண்டிப்பாக உயர்கல்வி கற்க முடியாது. இது உயர்கல்வி மாணவர