Posts

Showing posts from August 15, 2018
மாணவிகள் புகார் தெரிவிக்க ‘14417’ இலவச செல்போன் சேவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபி அருகே நாகதேவன்பாளையத்தில் ரூ.2 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘ஹெல்ப்லைன்’ சேவை மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் பிளஸ்-2 முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும். பள்ளிக்கு செல்லும் மாணவிகள் புகார்களை தெரிவிக்க ‘14417’ என்ற இலவச செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த எண்ணில் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் விபரம் பாதுகாக்கப்படும். இதில் புகார் தெரிவித்தவுடன் 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் முதல்முறையாக பள்ள