24 September 2014

இன்றைய மதுரை வழக்கின் உண்மை நிலவரம்....

 இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தடையாணை கொடுக்கப்பட்ட வழக்குகளில் அனைத்து வழக்குகளும் இடம் பெறவில்லை... ஒரு சில வழக்குகள் நாளை தான் இடம்பெறுகிறது. அந்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிந்த பின்பு தான் நமக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்...
Supreme court case details




    SLP (Civil)     3860-3861 /2014
    The Case is Converted to    Civil Appeal     9204-9205 / 2014

STATUS      PENDING
Cause Title
THE STATE OF TAMIL NADU REP.BY SEC.& ORS
Vs.
T.S ANBARASU & ORS
Advocate Details
 Pet. Adv.MR. M. YOGESH KANNA
 Res. Adv.MR. HARSHAD V. HAMEED

Subject Category
SERVICE MATTERS RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

Listing Details
There are No Further Orders of Listing
  Designed,Developed and Maintained by NIC Computer Cell,Supreme Court of India
ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து-MaalaiMalar News 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். 

மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது‘ என்று உத்தரவிட்டார். 

இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி தனி நீதிபதியின் உத்தரவைஎதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி கூறுகையில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை சரியல்ல என்ற அடிப்படையில் தான் தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்வது சரியான நடைமுறைதான் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

எனவே தனி நீதிபதி ஆசிரியர் நியமனத்துக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். ஆசிரியர் பணிக்கு 16 ஆயிரம் பேரின் சான்றிதழ் ஏற்கனவே சாரிபார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பணி நியமனத்துக்கு தடை விதித்து இடைக்கால நீதிபதி உத்தரவிட்டுஇருந்தார். இதனால் அவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
மதுரை நீதிமன்ற தடையாணை:மேல்முறையீட்டு வழக்கு

இன்று (24-9-14) விசாரணைக்கு வரும் மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர்பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணையை எதிர்த்து தமிழக அரசு நேற்று மேல்முறையீடு செய்துள்ளது. 

இன்று தடையாணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு வரும்..தமிழக அரசுதரப்பில் தடையாணை இரத்து செய்ய மும்மரமாக ஈடுப்பட்டுள்ளது

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...