Posts

Showing posts from September 24, 2014
இன்றைய மதுரை வழக்கின் உண்மை நிலவரம்....   இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தடையாணை கொடுக்கப்பட்ட வழக்குகளில் அனைத்து வழக்குகளும் இடம் பெறவில்லை... ஒரு சில வழக்குகள் நாளை தான் இடம்பெறுகிறது. அந்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிந்த பின்பு தான் நமக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்...
Image
Supreme court case details     SLP (Civil)       3860-3861 /2014     The Case is Converted to    Civil Appeal       9204-9205 / 2014 STATUS       PENDING Cause Title THE STATE OF TAMIL NADU REP.BY SEC.& ORS Vs. T.S ANBARASU & ORS Advocate Details  Pet. Adv. MR. M. YOGESH KANNA  Res. Adv. MR. HARSHAD V. HAMEED Subject Category SERVICE MATTERS  -  RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT Listing Details There are No Further Orders of Listing    Designed,Developed and Maintained by NIC Computer Cell,Supreme Court of India
ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து-MaalaiMalar News  இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.  மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது‘ என்று உத்தரவிட்டார்.  இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி தனி நீதிபதியின் உத்தரவைஎதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான
மதுரை நீதிமன்ற தடையாணை:மேல்முறையீட்டு வழக்கு இன்று (24-9-14) விசாரணைக்கு வரும் மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர்பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணையை எதிர்த்து தமிழக அரசு நேற்று மேல்முறையீடு செய்துள்ளது.  இன்று தடையாணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு வரும்..தமிழக அரசுதரப்பில் தடையாணை இரத்து செய்ய மும்மரமாக ஈடுப்பட்டுள்ளது