Posts

Showing posts from April 21, 2023
Image
  நீட் தேர்வுக்கு எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் தெரியுமா..? ஆண்களை விட பெண்களே அதிகம்.. நீட் இளங்கலை தேர்வு என்பது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், நர்சிங் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். அதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் நடப்பாண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு, மே 7 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இத்தேர்வுக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது..  அதன்படி நாட்டிலேயே மிகப்பெரிய நுழைவுத் தேர்வாக கருதப்படும் நீட் தேர்வுக்கு (NEET UG), இந்த ஆண்டு 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.. இது முந்தைய ஆண்டை விட 2.57 லட்சத்திற்கும் அதிகமாகும். குறிப்பாக இந்த ஆண்டு, மொத்தம், 11.8 லட்சம் பெண் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். ஆண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை விட இது 2.8 ல
Image
  ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை “ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு. "ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி" என்பது ஆன்றோர் வாக்கு. அதனால்தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று ஆசிரியர்களை தெய்வத்துக்கு இணையாக போற்றி வணங்குவது, தமிழர்களின் மரபாக இருக்கிறது.  தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆசிரியர்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறார்கள்? என்பதை பள்ளிக்கூட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் மானியக்கோரிக்கைக்கு பதிலளித்து பேசும்போது, அவர் படித்த ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி பேசினார். 'அமெரிக்காவில் 2 பேரை மிக உயர்ந்தவர்களாக பார்க்கிறார்கள். ஒருவர் விஞ்ஞானி, மற்றொருவர் ஆசிரியர். பிரான்சை பொருத்தமட்டில், நீதிமன்றத்தில் உட்காரக்கூடிய அந்த உரிமை ஆசிரியர்களுக்கு மட்டும்தான் உண்டு. ஜப்பானில் ஒரு ஆசிரியரை கைதுசெய்ய வேண்டுமென்றால், அரசாங்கத்தின் அனுமதியை பெற்றால்தான் முடியும். கொரியாவில் ஒரு அமைச்சருக்கு நிகரான அனைத்து சலுகைகளையும் உடையவர்கள்தான் ஆசிரியர்கள்' என்று புகழாரம் சூட்டினார். ஆக ஆசிரியர
Image
  புதுச்சேரியில் இந்த ஆண்டும் ஆல்பாஸ்: என்னவாகும் கல்வித்தரம்? கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி கல்வித்துறை இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகின்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 35% மதிப்பெண் பெற்று இருந்ததால் அந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.  ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்ச்சி பட்டியலை கல்வித்துறைக்கு மே 8-ம் தேதிக்குள் அனைத்து பள்ளி முதல்வர்களும் அனுப்ப வேண்டும். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வியாழக்கிழமை (ஏப்.20) முதல் கோடை விடுமுறை தொடங்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு அமலில் இருந்ததால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த இயலாத சூழ்நிலை இருந்தது. அதனால் அனைத்து மாணவர்களும் தேர
Image
  CUET PG 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு... மே 5 வரை விண்ணப்பிக்கலாம் என தகவல்!! க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மே 5 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் 2023-24ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஜூன் மாதம் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 1 முதல் புதிய கல்வியாண்டைத் தொடங்கலாம் என்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி
Image
  ஜூனில் ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபு.. டிஎன்பிஎஸ்சி தலைவராகிறாரா? வெளியான பரபர தகவல்.. விவரம் தமிழ்நாடு டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. குரூப்-1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு பணி நிலைகளில் காலியாகும் பணியிடங்களின் விவரங்களை பெற்று காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆண்டு தோறும் கால அட்டவணைப்படி டி.என்.பி.எஸ்.சி இத்தகைய தேர்வுகளை நடத்தி வருகிறது. டி.என்.பி.எஸ்.சி நடத்தும் இந்த தேர்வுகளை தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதி வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சியில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக உள்ளது. ஒரு தலைவர் 13 உறுப்பினர்கள் பணிபுரியும் இந்த அமைப்பில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இதில், 4 பேரில் ஒருவர் தற்காலிக தலைவராக இருந்து வருகிறார். மீதம் உள்ள 3 உறுப்பினர்களில் கிருஷ்ண குமார் என்ற உறுப்பி
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் திடீர் திருப்பம்.. பிடிஆர் எடுத்த அஸ்திரம்.. வருகிறது "ஏஐ".. முக்கிய தகவல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த 2022 நவம்பர் மாதம் 19ம் தேதி நடைபெற்றது, தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். இந்த தேர்வில் விண்ணப்பித்தவர்களில் 41 சதவிகிதம் பேர் தேர்வு எழுதவில்லை. வருகைப்பதிவு எண்ணிக்கை 59% என்ற நிலையில் இருந்தது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளுக்கு இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வுகள் நவம்பர் மாதம் நடத்த நிலையிலும் கூட இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு தாள்களை திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்ற