Posts

Showing posts from March 16, 2014
குரூப் 4-ல் தேர்ச்சி பெற்றவவர்களுக்கு மார்ச் 24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. குரூப் 4-ல் தேர்ச்சி பெற்றவவர்களுக்கு மார்ச் 24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறையினை தேர்ந்தெடுக்கும் கலந்தாய்வு மறுநாள் நடைபெறுகிறது.அதற்கான அழைப்பு கடிதம் தகுதி உள்ள தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வு 11 இடத்துக்கு 22,000 பேர் போட்டி , ஜூன் 8-ல் முதல்நிலைத் தேர்வு நேரடி மாவட்டக் கல்வி அதிகாரி தேர்வுக்காக11காலியிடங்களுக்கு22ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு,ஜூன்8-ம் தேதி நடக்கிறது. மெயின் தேர்வு,நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில்11பேருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும்.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில்11மாவட்டக் கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. கடந்த பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,இயற்பியல்,வேதியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில்9காலியிடங்களும்,அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் களுக்கு2காலியிடங்களும் உள்ளன.டி.என்.பி.எஸ்.சி. தகவல்ஆன்லைனில் விண்ணப்பிப்பதற் கான கடைசி தேதி கடந்த12-ம் தேதியுடன் முடிவடைந்தது. டி.இ.ஓ. தேர்வுக்கு சுமார்22ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார்.11காலியிடங்களுக்கு22ஆயிரம் பேர் போட்டி போடுகிறார்கள்.முதல்நிலைத் தேர்வுடி.இ.ஓ. தேர்வு என்பது முதல் நிலைத்தேர்வு,மெயின் தேர்வு என இரு நில