11 August 2014

புதியதாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் "Teacher Recruitment News" சார்பாக வாழ்த்துக்கள்!!!
முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு இறுதி முடிவு வெளியீடு - தினகரன்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றின் இறுதி முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. 

அரசு மேனிலைப் பள்ளிகளில் 2012&2013ம் ஆண்டுக்கான காலிப் பணியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், விளையாட்டு கல்வி இயக்குநர் கிரேடு&1 ஆசிரியர்களை நியமிக்க போட்டித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. கடந்த அக்டோபர் 7ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 

அதற்கான கீ&ஆன்சர் மீதுதொடரப்பட்ட வழக்கின் காரணமாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் பின்னர் வெளியிடப்பட்டு கடந்த ஜனவரி 17ம் தேதி சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட முதுநிலை பட்டதாரி தேர்வில் ஆங்கிலம்(347), கணக்கு(288), வேதியியல்(220), தாவரவியல்(192), வரலாறு(173), நுண்ணுயிரியல்(31) பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் தற்காலிக தேர்வுப் பட்டியலை வெளியிட்டது. 

இந்த பட்டியலில் சிலரின் விவரங்கள் விடுபட்டுள்ளதாகவும், சிலரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரியல் பாடத்தில் மட்டும் 13 பேர் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைத்து நியமனங்கள் வழங்கப்படும். மேலும், பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதி முடிவையும் வெளியிட்டுள்ளது. 

பட்டதாரி ஆசிரியர் சான்று சரிபார்ப்பில் பங்கேற்காமல் விடுபட்டவர்களுக்கு கடந்த மாதம் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதன் பேரில் இறுதி பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

 தேர்ச்சி பெற்றவர்களில் தொடக்க கல்வி துறையில் பணி நியமனம் செய்ய இயற்பியல் 65, வேதியியல் 65, தாவரவியல் 33, விலங்கியல் 32 பேர் ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை யின் கீழ் வரும் உயர்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்வதற்காக தமிழ் 772, ஆங்கில் 2865, கணக்கு 993, இயற்பியல் 642, வேதியியல் 642, தாவரவியல் 275, விலங்கியல் 275, வரலாறு 3659, புவியியல் 916 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு : விரைவில் பணி நியமன ஆணை --- தின மலர் 

முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று வெளியிட்டது.தமிழக அரசு பள்ளிகளில், மேல்நிலைப் பள்ளிகள் அளவில், காலியாக இருந்த, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், தமிழ் பாடத்திற்கான இறுதி தேர்வு பட்டியல், பல மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டு, பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன.

இந்நிலையில், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட, பாடங்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள், ஜனவரியில் வெளியிடப்பட்டன. இதில், சிக்கல்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டதால், முதுகலை ஆசிரியர் நியமனம் தாமதமாகியது. கோர்ட்டில், சமீபத்தில், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளாதார பாடங்கள் தொடர்பான உத்தரவு வெளியானது.

இந்த உத்தரவின் படி, ஆசிரியர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், எஞ்சியுள்ள ஆங்கிலம், கணிதம், தாவரவியல், உயிரியல், நுண் உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில், 1,326 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, தகுதியானவர்கள் பட்டியலை டி.ஆர்.பி., வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் பட்டியலை, கடந்த மாதம், 14ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. 

இதில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரது பட்டியல், விரைவில் வெளியாகும் என,அறிவிக்கப்பட்டது. இதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், 10,726 பேருக்கான தேர்வுப்பட்டியலையும், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியல், சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இம்மாத இறுதிக்குள், இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது. இடை நிலை ஆசிரியர்கள் இவர்கள் தவிர, இடை நிலை ஆசிரியர்கள், 4,000 பேருக்கான இறுதிப்பட்டியலும், இந்த மாத இறுதிக்குள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் விரைவில், பணி நியமனம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
10,500 பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு -- தின தந்தி

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதி தேர்வு இந்தியாவில் அரசு பணியில் மட்டுமல்ல, அரசு உதவி பெறும் பள்ளிகளாக இருந்தாலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்தது. 

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3–வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5–ந்தேதி வெளியிடப்பட்டது. 

இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்ச்சி சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி சதவீதத்தை இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர். ஜெயலலிதாவின் அறிவிப்பை தொடர்ந்து தேர்ச்சி மதிப்பெண் 82 என்று பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை பிறப்பித்தார். 

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு பின்னர் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண், பள்ளிக்கூட பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்களாக 10 ஆயிரத்து 500 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பட்டியல் இடை நிலை ஆசிரியர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க தனியாக முகாம் நடத்தப்படுகிறது. 

அதன்பிறகுதான் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபுனய்யார், உறுப்பினர் அறிவொளி ஆகியோர் தெரிவித்தனர்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...