Posts

Showing posts from July 15, 2017
பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு நடக்குமா?: டி.ஆர்.பி.,  மவுனத்தால் பட்டதாரிகள் குழப்பம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கான  அரசாணையை,  சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால்,  ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,அறிவித்த தேர்வு நடக்குமா  என, பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், ௧,௦௫௮ விரிவுரையாளர்  பணியிடங்களுக்கு,  ஆக., ௧௩ல் எழுத்து தேர்வு நடக்கும்' என, டி.ஆர்.பி., அறிவித்திருந்தது. தேர்வுக்கு, ஜூன், ௧௭ முதல் விண்ணப்பமும் பெறப்பட்டது. ஆனால்,  தேர்வு நடத்துவதற்கான அரசாணையில் குழப்பம் உள்ளதாக,  பட்டதாரிகள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  அதில், 'பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிப்படி,  முதுநிலை பட்டதாரிகளையே நியமிக்க வேண்டும். 'டி.ஆர்.பி., அறிவித்த  தேர்வுக்கு, பி.இ., என்ற இளநிலை இன்ஜினியரிங் முடித்தவர்கள்  அனுமதிக்கப்பட்டு உள்ளனர்' என, கூறப்பட்டுள்ளது. இதை
826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் - கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் தமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில், சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. சில மாவட்டங்களில், மாணவர், ஆசிரியர் விகிதம் குறைவாகவும், சில மாவட்டங்களில், அதிகமாகவும் உள்ளது. இந்த பிரச்னையால், தொடக்கப் பள்ளிகளின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், தமிழக பள்ளிகள் செயல்பாட்டை, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. இதில், பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கியமாக, தமிழகத்தில், 817 தொடக்க பள்ளிகளிலும், ஒன்பது நடுநிலை பள்ளிகளிலும், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவது தெரிய வந்துள்ளது. இந்த ஒரு ஆசிரியரும், விடுப்பு எடுத்தாலோ அல்லது கல்வித்துறையின் வேறு பணிகளுக்கு சென்றாலோ, பாடம் நடத்த ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு,
Image
TRB - TNTET - 2017 : ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017ல் நடைபெற்ற தேர்வில் தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைப்பு. Teachers Recruitment Board   College Road, Chennai-600006 TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2017 CERTIFICATE VERIFICATION Click here for Individual Call Letter - Download Click here for - Bio-Data Form  Click here for - ID Form  Dated:   14 - 0 7 -201 7 Chairman Home
17ல் பி.எட்., கவுன்சிலிங் துவக்கம் : இணையதளத்தில் 'கட் ஆப்' வெளியீடு பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், ௧௭ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 14 அரசு கல்வியியல் கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, ௨௧ கல்வியியல் கல்லுாரிகளில், ௧,௭௫௩ இடங்களுக்கு, பி.எட்., படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 5,733 பேர் : இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழக அரசின் சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியால் நடத்தப்படுகிறது. விண்ணப்ப பதிவு, ஜூன், 21ல் துவங்கி, 30ல் முடிந்தது; 5,733 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை செயலரும், லேடி வெலிங்டன் கல்லுாரி முதல்வருமான கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர், விண்ணப்பங்களை பரிசீலனை செய்தனர். இதில், 'கட் ஆப்' மதிப்பெண்ணின் படி, 2,996 பேர், முதற்கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வரும், 17 முதல் கவுன்சிலிங் துவங்குகிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்க வருவோர், 'செயலர், தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை, 2017 - 18' என்ற பெயரில், கவுன்சிலிங் கட்டணத்தை, வங்கி வர