Posts

Showing posts from June 14, 2022
Image
  இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது: மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது - பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்: படிப்படியாக இத்திட்டம் நிறுத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Image
  வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்: மீண்டும் மக்கள் நலப்பணியே வழங்க வேண்டும் என கோரிக்கை ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தங்களுக்கு பணி வழங்காமல் ஏற்கெனவே உறுதி அளித்த பணியையே வழங்க வலியுறுத்தி வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசால் வேலையிழந்த தங்களுக்கு அதேபணியை வழங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும். தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்ட உத்தரவு, பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு சார்பில் இதே உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு மக்கள் நலப்பணியாளர் பணி தான் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2011-ம் ஆண்டு அதிமுக அரசால் 13,500 மக்கள் நலப்பணியாளர்களை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பதவிநீக்கம் செய்தார். மீண்டும
Image
` இந்த கல்வியாண்டில் முழு பாடத்திட்டம்!'- பள்ளிக் கல்வித்துறையின் அடுத்த உத்தரவு! தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை முழு பாட பகுதிகளையும் நடத்துவற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-21 ம் கல்வியாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது. அதனால் பாடப்பகுதிகள் குறைத்து அறிவிக்கப்பட்டன. 2021-22 ம் கல்வியாண்டிலும் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் திறப்பு காலதாமதமானது. இதனால் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அந்த வருடத்திலும், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. அதன்படி,10-ம் வகுப்புக்கு 39 சதவீதம், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் என்ற விகிதத்திலும், 1முதல் 9 வரை 50 சதவிகித பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கல்வியாண்டான 2022-23-ல் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் துவக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கொரோனாவிலிருந்து நாடு மீண்டு இயல்புக்கு திரும்ப
Image
  மாணவர்களின் செல்போன் திருப்பி தரப்படாது;9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,நேற்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் எனவும்,மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போன் கொண்டு வந்தால்,அவை பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தரப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்: "மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் செல்போனை கொண்டு வரக்கூடாது, மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் தரப்பட மாட்டாது. இதனிடையே,பள்ளிகளில் சேர மாற்றுச்சான்றிதழை தருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.மாற்றுச்சான்றிதழ் வழங்க தாமத
Image
  அரசு பள்ளிகளில் உடனடியாக 50,000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.! தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப்பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி ப
Image
  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை    அதிகரிக்கும் காலியிடங்கள்: உடனடியாக 50,000 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்! தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு வலிமையான அடித்தளம் அமைப்பது தொடக்கக்கல்வி தான் என்னும் நிலையில், அதை வலுப்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப்பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, தொடக்கப்பள்ளிகளில் 1,14,155 வகுப்புகள், நடுநிலைப்பள்ளிகளில் 52,696 வகுப்புகள் என மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகள
Image
  மதிப்பெண் பட்டியல் தயார்; 17ல் பத்தாம் வகுப்பு 'ரிசல்ட்' பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியல் சரிபார்ப்பு பணி, இறுதி கட்டத்தில் உள்ளது. திட்டமிட்டபடி வரும், 17ம் தேதி தேர்வு முடிவு வெளியாக உள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வுகள், மே மாதத்தில் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தம், ஜூன் 1ல் துவங்கி 10ம் தேதி முடிந்தது. அதன் விபரம் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விடைத்தாளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரம், கணினி வழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபரங்கள், முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக, தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.பாடவாரியாக மாணவர்கள் பெற்ற மதிப்பெண், மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண், தேர்ச்சி பெற்றவர்களின் விபரம், அதிக மதிப்பெண் பெற்றவர்களின் சதவீதம் போன்றவை, பட்டியலாக தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, திட்டமிட்டபடி வரு
Image
கல்விதான் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் - 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் அறிவுரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால், மாணவர்களின் கற்றலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடைவெளியை குறைக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுதி படிப்பதை உறுதி செய்யும் விதமாக 'எண்ணும் எழுத்தும்' திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 'எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடர்பான காணொலி, கைபேசி
Image
  இனி ஆசிரியர்கள் விடுமுறை வேண்டும் என்றால் நேரில் செல்ல வேண்டாம்.! ஆன்லைன் மூலமே அப்ளை செய்யலாம்.! தமிழக அரசு அறிவிப்பு.! ஆசிரியர்கள் இனி செயலி வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும்.நேரில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்து அனுமதி பெறும் நடைமுறை தமிழக அரசு ரத்து செய்துள்ளது . அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுக்கு விடுப்பு வேண்டுமென்றால் தலைமை ஆசிரியரிடம் விடுப்பு விண்ணப்பம் எழுதி ஒப்படைக்கும் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் பணி சார்ந்த சேவைகளை இணையவழியில் பெறுவதற்கான செயலி பயன்பாட்டை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இனி மருத்துவ விடுப்பு, தற்செயலாக எடுக்க வேண்டி இருக்கும் விடுப்பு உள்ளிட்டப் பல்வேறு பணிகளுக்கு எழுத்துப் பூர்வமாக மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டு வந்த நடைமுறையை தமிழக அரசு கடைபிடித்து வந்தது. இந்நிலையில் இதனால் ஏற்படும் கால நேரத்தை சரி செய்யும் பொருட்டு TN SED schools என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி 2022-23 கல்வி ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பணி சார்ந்த தேவைகளை