Posts

Showing posts from November 21, 2022
Image
 ' சம்பள உயர்வு, பணிநிரந்தரம் வேண்டும்..' - முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை தமிழகப் பள்ளிகளில் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பாசிரியர் பாடங்களில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதிநேர ஆசிரியர்களாக 12,327 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களை, தி.மு.க தேர்தல் வாக்குறுதி 181ல் கூறியபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது, "எங்களுக்கு முன்பு உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி பாடங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு சிறப்பாசிரியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை அதே உடற்கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட பாடங்களில் "சர்வ சிக்சா அபியான்" என்ற மத்திய அரசு திட்டத்தில் தமிழ்நாடு அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு ரூ 5 ஆயி
Image
  புதுவை வேளாண்துறையில் 33 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 33 காலிப் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை (நவ. 21) முதல் விண்ணப்பிக்கலாம். புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் 33 காலிப் பணியிடங்களுக்கு திங்கள்கிழமை (நவ. 21) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் வேளாண் அலுவலா்களுக்கான 33 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துறையில் நேரடி நியமனம் மூலம் காலியாக உள்ள 23 வேளாண் அலுவலா்கள், 5 வேளாண் அலுவலா் (பொறியியல்) மற்றும் 5 வேளாண் அலுவலா் (நிலவியல்) ஆகிய 33 காலிப் பணியிடங்களுக்கு புதுச்சேரியைப் பூா்வீகமாகக் கொண்ட மற்றும் வசிக்கும் தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானோரின் விண்ணப்பங்களை 21- ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை புதுவை அரசு இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களுக்கு
Image
  தமிழ் பேராசிரியர்கள் இன்ஜி., கல்லுாரியில் நியமனம்? இன்ஜினியரிங் படிப்பில், கட்டாய தமிழ் பாடம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், தமிழ் பாடம் நடத்தும் உதவி பேராசிரியர்களை நியமிக்க, இன்ஜினியரிங் கல்லுாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளன. தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.அண்ணா பல்கலை, ஏற்கனவே அமல்படுத்திய பாடத் திட்டத்தில், இன்ஜினியரிங் தொடர்பான தொழில்நுட்ப பாடங்கள் மட்டும் இடம் பெற்றன; மொழி பாடங்கள் இடம் பெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டில் இருந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த பாடத் திட்டத்தின்படி, முதலாம், இரண்டாம் செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு, தமிழ், தமிழர் பண்பாடு, நாகரிகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் தமிழ் ஆகிய இரண்டு பாடங்கள் கட்டாய பாடமாகி உள்ளன.  இதைத் தொடர்ந்து, இந்த பாடங்களை நடத்துவதற்கு, தமிழ் பாடத்தில் யு.ஜி.சி., தகுதி பெற்ற உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, அண்ணா பல்கலை மற்றும் பிற இன்ஜினியரிங் கல்லுார
Image
  தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் நியமனம்: அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறுவதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளையொட்டி, வரும் 27ம் தேதி முதல் மதுரை வடக்கு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது குறித்து வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், திருப்பாலையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வணிக வரி பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தலையாரி, சத்துணவு பணியாளர்கள், ரேஷன் கடையில் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதற்கான பட்டியலை பாகுபாடு, வேறுபாடு பார்க்காமல் தயாரிக்கப்பட இருக்கிறது. அதுபோல தமிழகம் முழுவதும் பதிவுத்துறையில் 20,000 ஆவண எழுத்தர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட இருக்கின்றனர். சென்ற 10 ஆண்டுகளாக போர