Posts

Showing posts from July 12, 2022
Image
 5 ஆண்டு சட்டப்படிப்புகள் : விண்ணப்பப் பதிவை துவக்கியது அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகம் !! தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள அனைத்து சட்ட கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவை துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தரும்புரி, இராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி ஆகிய நகரங்களில் உள்ள 14 அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் சேலம், திண்டிவனத்தில் அமைந்திருக்கும் தனியார் சட்டக்கல்லூரிகளும் பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளான BA, LLB., BCom, LLB., BBA, LLB., BCA, LLB., பட்டபடிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில் சீர்மிகு சட்டப் பள்ளி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகத்தில் 624 இடங்களும், பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 1,731 இடங்களும் என மொத்தம் 2,355 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு 2022 - 23 ஆம் கல்வி ஆண்டின் மாணவர் சேர்
Image
  TET - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை திருத்தம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - TRB ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ( TNTET Paper 1 and Paper II ) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 2,30,878 பேரும் மற்றும் தாள் 11 க்கு 4,01,886 பேரும் மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வருகிறது . ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று , ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ( TNTET Paper 1 and Paper Il ) க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11.07.2022 முதல் 16.07.2022 வரை திருத்தம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வ
Image
  மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான 'இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான மத்திய அரசின் 'இன்ஸ்பயர்' விருதுக்கு, தகுதியான பள்ளி மாணவர்களின் பெயரை செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை சார்பில் ஆண்டுதோறும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் விருதுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. எனவே, 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வகுப்புக்கு 5 பேரையும், நடுநிலைப் பள்ளிகளில் 3 பேரையும் பதிவு ச
Image
  TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும்.! அரசு அதிரடி உத்தரவு.! TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்; 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும்; 3, 188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.12,000 தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சிப் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் இல்லம் தேடி கல்வி' திட்டத் தன்னார்வலர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ள