Posts

Showing posts from January 1, 2020
TNPSC 2020: ஜனவரி 20 முதல் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு !! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2020 காண குரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. சமீபத்தில் 2018-19 ஆண்டுக்கான குரூப் 1 தேர்வுகளின் முடிவுகள் வெளியாகின. இந்த முடுவுகள் வெளியான கையேடு 2020 குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பையும் தமிழ்நாட்டு அரசு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 20 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 19 தேதி வரையில் விண்ணப்பிக்கலாம், மேலும் எழுத்து தேர்வு ஏப்ரல் 5 தேதி நடைபெரும் என அறிக்கை வெளியிட்டது. மேலும் சம்பந்தமான விரிவான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்தது. விவரங்களுக்கு தேர்வாணைய வெப்சைட்டை அணுகவும் www.tnpsc.gov.in
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: தனித்தோ்வா்கள் ஜன.6 முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழகத்தில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு தனித்தோ்வா்கள் வரும் ஜன.6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பாக அரசுத்தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தோ்வா்கள் ஜன. 6-ஆம் தேதி முதல் ஜன. 13-ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தோ்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.