Posts

Showing posts from October 4, 2023
Image
  அரசின் அறிவிப்புகளில் திருப்தியில்லை: போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மூவர் குழு நியமிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அறிவித்த நிலையில், அதில் திருப்தி இல்லை என்பதால், போராட்டம் தொடரும் என பகுதிநேர ஆசிரியர் சங்கமும் டெட் ஆசிரியர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. சென்னை நுங்கம்பாக்கம், டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  டெட் ஆசிரியர்கள் சங்கம் கூறுவது என்ன? ’2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பண
Image
  NET தேர்வுக்கு அக்.28 வரை விண்ணப்பிக்கலாம் உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28-ம் தேதிக்குள் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 6 முதல் 22-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 83 பாடங்களுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். பட்டதாரிகள் /ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக அக்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த அக்.29-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் அக்.30, 31-ல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து டிசம்பர் முதல்வாரத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்படும். இதற்கான விண்ணப்பகட்டணம், பாடத்திட்டம் உட்பட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு என்டிஏ தெரிவித்துள்ளது.
Image
  கரும்பலகை துடைக்கவும், கழிவறையை கழுவக் கூட தயார்..! - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கண்ணீர் பேட்டி! மாதம் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி கொடுத்து, கரும்பலகை துடைக்க சொன்னாலும், கழிவறையை கழுவச் சொன்னாலும் செய்யத் தயராக இருப்பதாக 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நியமனம் கோரி 6-வது நாளாக தொடரும் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம். பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில், 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பினர், பணி நியமனம் வழங்கக்கோரித் தொடர்ந்து 6-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து 2013-ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் கூறுகையில், "டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் எங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக இருக்கிறது. எங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்று முடிந்துள்ளது. அதேபோல, அரசாணை 149 ரத்து