28 March 2022

 ஜிப்மர் வேலைவாய்ப்பு 2022 - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ..




 ஜவஹர்லால் 
நேரு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஜிப்மர்) நிறுவனத்தில் 2022-ஆம் ஆண்டில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


நர்சிங் அதிகாரி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர் (சிவில்), இளநிலை பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), தொழில்நுட்ப உதவியாளர் - என்டிடிசி, டெண்டல் மெக்கானிக், மயக்கவியல் தொழில்நுட்பவியலார், ஸ்டெனோகிராபர் கிரேட் 2 மற்றும் இளநிலை நிர்வாக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு நியமனம் நடைபெற இருக்கிறது.


நர்சிங் அதிகாரி பணியிடத்துக்கு, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 2022 மார்ச் 30-ஆம் தேதிக்கு முன்னதாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இணைய முகவரி www.jipmer.edu.in ஆகும். குரூப் பி மற்றும் குரூப் சி வகை பணிகளில் 143 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்யும் நபர்களை தகுதி அடிப்படையில் வரையறை செய்து, அவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முக்கிய தேதிகள் :


ஜிப்மரில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கான தேதி - 10 மார்ச் 2022.


நர்சிங் அதிகாரி, இளநிலை பொறியாளர், டெண்டல் மெக்கானிக் ஆகிய பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு - 2022 ஏப்ரல் 17ஆம் தேதி - காலை 9 மணி முதல் 10.30 மணி வரை.


மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு - ஏப்ரல் 17ஆம் தேதி நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை.


இளநிலை அலுவலக உதவியாளர், மருத்துவ ஆய்வக உதவியாளர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு - ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையில்.


ஊதிய விவரம்:


நர்சிங் அதிகாரி - ரூ.44,900

மருத்துவ ஆய்வக உதவியாளர் - ரூ.35,400

இளநிலை பொறியாளர் - ரூ. 35,400

என்டிடிசி தொழில்நுட்ப உதவியாளர் - ரூ.35,400

டெண்டல் மெக்கானிக் - ரூ.25,500

இளநிலை அலுவலக உதவியாளர் - ரூ.19,900

மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் - ரூ.25,500

ஸ்டெனோகிராஃபர் கிரேட் 2 - ரூ.25,500


கல்வித் தகுதி:


நர்சிங் அதிகாரி - பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு.


மருத்துவ ஆய்வக உதவியாளர் - மருத்துவ ஆய்வக அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டு அனுபவம்.


இளநிலை பொறியாளர் - சிவில் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டு அனுபவம் அல்லது டிப்ளமோ படிப்பு 3 ஆண்டு அனுபவம். கட்டட டிசைன் மற்றும் கட்டுமான திட்டங்களில் பணி செய்திருக்க வேண்டும். இதேபோன்று எலெக்ட்ரிக்கல் பிரிவில் படப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் எலெக்ட்ரிக்கல் கட்டமைப்பு பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


என்டிடிசி தொழில்நுட்ப உதவியாளர் - இசிஇ பிரிவில் பொறியியல் படிப்பு.


டெண்டல் மெக்கானிக் - அறிவியல் பாடத்துடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி.


இளநிலை அலுவலக உதவியாளர் - 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆங்கிலம் அல்லது ஹிந்தி டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.


மயக்கவியல் தொழில்நுட்பவியலாளர் - மயக்கவியல் பிரிவில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.


ஸ்டெனோகிராஃபர் கிரேட் 2 - 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் திறன் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.


 ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டங்கள்.. வெளியான மொத்த லிஸ்ட் இதோ..!!!!




ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முழு பாடத்திட்டங்கள் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்ற விரும்பினால் இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு 2 தாள்களைக் கொண்டது‌. அதாவது முதல் எழுதுபவர்கள் 12-ம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும் D.T.Ed முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும் இந்த தேர்வினை எழுதலாம். இந்த முதல் தாள் தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் வெளியாகியுள்ளது. அதாவது,


மொழிப்பாடம்: (30 மதிப்பெண்கள்) சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: (30 மதிப்பெண்கள்) 6 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்

ஆங்கிலம்: (30 மதிப்பெண்கள்) மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள்

கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி: (30 மதிப்பெண்கள்) கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்தப் பாடங்களில் கற்பித்தல் புரிதல்

இரண்டாம் தாள் தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இருக்கும். இந்த தேர்வு சுமார் 3 மணி நேரம் நடைபெறும். இதில்,


மொழிப்பாடம்: (30 மதிப்பெண்கள்) சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள்

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: (30 மதிப்பெண்கள்) 11 முதல் 14 வயது உட்பட்டவர் களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்

ஆங்கிலம்: (30 மதிப்பெண்கள்) மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு: (60 மதிப்பெண்கள்) கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்தப் பாடங்களில் கற்பித்தல் புரிதல்

இந்த தகுதி தேர்வுக்கு https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த தேர்வில் விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் 500 ரூபாயும், SC, ST, SCA மற்றும் மாற்றுத்திறனாளிகள் 250 ரூபாயும் செலுத்தவேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதி வரை கடைசி நாளாகும்.

 TANGEDCO: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு மின்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!




மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 முதல் அதிகபட்சம் ரூ.9,000 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த Electrician பணிகளுக்கு மொத்தம் 60 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் 


For More Info: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)

 மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: கற்றல், கற்பித்தல் பணிகள் தொய்வு




கோவை:கோவை மாநகராட்சி பள்ளிகளில், 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கற்றல், கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 17 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலை, 13 நடுநிலை, 42 ஆரம்பப்பள்ளிகள் உட்பட, 83பள்ளிகள் செயல்படுகின்றன.


தற்போது, 850 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில், 90 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஆசிரியர் பற்றாக்குறையால் பணிச்சுமை அதிகரிப்பதுடன் கற்றல், கற்பித்தல் பணிகளும் பாதிக்கப்படுகிறது. பல பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறையும் இருப்பதாக, அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், போதுமான ஆசிரியர்கள் இல்லை.


குறிப்பாக, ஆரம்பப்பள்ளிகளில் அதிகப்படியான காலியிடம் உள்ளது.பல மாணவர்களுக்கு அடிப்படை எழுத்து, வாசிப்பே தெரியவில்லை என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணிச்சுமை காரணமாக, தனிக்கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. 


பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்து வரும் கலந்தாய்வு முழுமை பெற்றால் மட்டுமே உரிய முடிவுகளை அலுவலர்களால் மேற்கொள்ள முடியும் என்பதே உண்மை. தேர்வுகள் நெருங்குவதால், பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து, ஆசிரியர்கள் தரப்பில் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

 மாணவர்களுக்கு 2022-2023 கல்வியாண்டில் நாடு முழுவதும் 21 புதிய சைனிக் பள்ளி: மத்திய அரசு ஒப்புதல்




நாடு முழுவதும் 2022-2023 கல்வியாண்டில் கூட்டு முயற்சியில் 21 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.


தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள விகாசா என்ற தனியார் பள்ளியுடன் இணைந்து சைனிக் பள்ளியை திறப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசு சாரா நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக நாடுமுழுவதும் 21 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


நாட்டில் 100 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவது என்ற அரசின் முன்னெடுப்பின்கீழ் முதற்கட்ட நடவடிக்கையாக இப்பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. தற்போதுள்ள சைனிக் பள்ளிகளிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும். தேசிய கல்விக் கொள்கையுடன் ராணுவத்தில் சேர்வது உட்பட சிறந்த வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், தரமான கல்வியை அளிக்க 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இது தொடங்கப்படவுள்ளது.


இதன்மூலம், தனியார் துறையும் அரசுடன் இணைந்து நாட்டை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இன்றைய இளைஞர்களை நாளை பொறுப்புமிக்க குடிமக்களாக திகழச் செய்ய முடியும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட 20 சைனிக் பள்ளிகள் குறித்த விவரங்களை www.sainikschool.ncog.gov.in. என்ற இணைய தளத்தில் காணலாம். மொத்தமுள்ள 21 புதிய சைனிக் பள்ளிகளில் 7 பள்ளிகள் வழக்கமான பள்ளிகளாகவும், 14 பள்ளிகள் உண்டு-உறைவிட பள்ளிகளாகவும் இருக்கும்.

 அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உபரி பேராசிரியர்கள் பணிக்காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு: உயர்கல்வித்துறை உத்தரவு




அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பேராசிரியர்கள் பணி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானவர்களை விட, அதிக அளவிலான துணை பேராசிரியர்கள் பணியில் இருந்தனர். இதையடுத்து உபரியாக இருந்த 370 துணை பேராசிரியர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழக நிதிநிலை சரியில்லாததால், மாற்றப்பட்ட 370 உபரி துணை பேராசிரியர்களை, தற்போது மீண்டும் திரும்பப்பெற முடியாது என்று உயர்கல்வித்துறைக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகம் கடிதம் எழுதியிருந்தது.


இந்நிலையில் பிற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 370 உபரி பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வி துறை ஆணையிட்டுள்ளது.


அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து ஏற்கனவே 4 ஆண்டுகால டெபுடேஷனில் பிற உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட 370 துணை பேராசிரியர்களும், தற்போது பணியாற்றி வரும் பிற கல்லூரிகளிலேயே அடுத்த 3 ஆண்டு காலத்துக்கும் பணியாற்றிட வேண்டும்.இதற்கு தேவையான நடவடிக்கைகளை கல்லூரிக்கல்வி இயக்குநரகம் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 தேர்வர்களே ஏமாந்துறாதீங்க!.. TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்கள்.. வெளியான முக்கிய தகவல்..!!!

!



தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசுப்பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.


ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து இந்த வருடம் குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


அந்த வகையில் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் கடந்த மாதத்தில் வெளியானது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது. அதாவது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 23ஆம் தேதி அன்று வெளியாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் ஒன்று பரவியுள்ளது.


இதனால் தேர்வர்கள் உண்மை நிலவரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு டிஎன்பிஎஸ்சி செயலர் உமா மகேஸ்வரி விளக்கமளித்துள்ளார். அதாவது செய்திக்குறிப்பில், "சமூக வலைதளங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு குறித்த தவறான அறிக்கை பரவிக்கொண்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் இந்த அறிக்கையை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.


 தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாக மட்டுமே டிஎன்பிஎஸ்சி அறிக்கைகள் அனைத்தும் வெளியாகும். விரைவில் குரூப்-4 தேர்வுக்கான அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. எனவே தேர்வர்கள் அதனை பார்த்து அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 5,255 காலிப்பணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...