Posts

Showing posts from May 3, 2023
Image
 நீட் தேர்வு நகரங்கள் (NEET City Intimation Slip 2023) இணையதளத்தில் வெளியீடு: ஹால் டிக்கெட் விரைவில் பதிவேற்றம் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வு நடக்கும் நகரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2023-24ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் நிறைவடைந்தது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்னும் ஓரிருதினங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தேசிய தேர்வுகள் முகமை மூத்த இயக்குநர் (தேர்வுகள்) மருத்துவர் சாதனா பிரஷார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்தியாவில் 499 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு மே 7-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த
Image
  10000 காலியிடங்கள்.. அங்கன்வாடிகளில் வேலை.. என்ன தகுதி.. எப்படி விண்ணப்பிப்பது..? தமிழக அரசு சார்பில் பல அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 10,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. D.Ted படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கலப்பு திருமணம், மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள், விதவை பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து தகுதி சான்றிதழ், விண்ணப்பக்கடிதம், அனுபவ சான்றிதழ், விதவை சான்றிதழ், சாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ் ஆகியவை அவசியம் தேர்வு முறை : நேர்முகத்தேர்வு, எழுத்துத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 45 ஆண்டுகள். இந்த பணிக
Image
  வட்டார கல்வி அதிகாரி தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மீது அதிருப்தி வட்டார கல்வி அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வராததால் பி.எட்.பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக தொடக்க கல்வித் துறையில் வட்டார கல்வி அதிகாரி (பிஇஓ) பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன. அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக வட்டார கல்வி அதிகாரி ஆகின்றனர். நேரடி நியமனத்துக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்துகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் பட்டப் படிப்பு, பி.எட். பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம். நேரடியாக இப்பணிக்கு வருபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர். அதன்பிறகு, மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம். இந்த நிலையில், வட்டார கல்வி அதிகாரி நியமனத்தில் 23 காலியிடங்களை நேர
Image
2 ஆண்டு ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் 'பணால்'; பட்டதாரிகள் அதிருப்தி : தி.மு.க., ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பட்டதாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லுாரிகளில், ஆசிரியர் பணி நியமனங்களுக்கு, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், போட்டித் தேர்வு நடத்தப்படும்.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 7ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால், இதுவரை அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கான ஆசிரியர் பணிகளுக்கு, புதிய நியமனங்களை மேற்கொள்ளவில்லை. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிட்ட, வருடாந்திர பணி நியமன நடவடிக்கை குறித்த நாட்காட்டியில் அறிவித்த எந்த தேர்வும் நடத்தப்படவில்லை.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லுாரிகளுக்கும் உதவி பேராசிரியர்களை நியமிக்க, 4,000 பணியிடங்களுக்கு, ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என, அறிவி
Image
  60,000க்கும் மேற்பட்டோர் அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர விண்ணப்பம்... பள்ளிக்கல்வித்துறை தகவல்!! அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் முதல் தொடங்கப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப்.17 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கி இருப்பதால், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு கால அவகாசம் எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் அரசு பள்ளிகளில் ஆகஸ்டு மாதம் வரை மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. த