மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள் இணையதளத்தில் வெளியீடு.
கடந்த மாதம் 21ம் தேதி நாடுமுழுவதும் நடந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைத்தாள்கள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
www.cbse.nic.in, www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைத்தாள் நகல் மற்றும் அதில் குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதுதொடர்பாக ctet@ cbse.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். என சி.பி.எஸ்.இ அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடந்தது. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.
கடந்த வாரம் கீ ஆன்சர் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று தேர்வர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ( www.cbse.nic.in, www.ctet.nic.in)
விடைத்தாள் நகல் மற்றும் அதில் குறிப்பிட்ட விவரங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அதுதொடர்பாக ctet@ cbse.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் வரும் கோரிக்கை ஏற்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடந்தது. தமிழ்நாட்டில் 7 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர்.
6 October 2014
TET Article : என் ஆசிரியர் கனவையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்- ஒரு ஆசிரியையின் கண்ணீர் குமுறல்
என் பெயர் ஆண்டாள், வயது 40, ஊர் ஓசூர் விவசாய கூலி செய்யும் ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்தேன்..
1992 ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படித்து கொண்டிருந்தேன் திடிரென அப்போதைய அரசு அப்ருவல் இல்லாத நிறுவனம் என்ற பெயரில் எங்கள் நிறுவனத்தில் படித்த மாணவர்களின் படிப்பினை ரத்து செய்தனர் அன்றே இறந்திருப்பேன் இருந்தாலும் என் ஆசிரியர் கனவு தடுத்தது...
பல்வேறு சூழ்நிலைக்கிடையில் மறுபடியும் கஸ்டப்பட்டு D.T.Ed.,B.Litt.,MA படித்தேன் ..
தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக என் இரண்டு குழந்தைகளையும் தன்னந்தனியே தவிக்கவிட்டு அல்லும் பகலும் அயராது படித்து தாள் 1ல் 13TE33100141- 110 மதிப்பெண்ணும் தாள் 2ல் 13TE33200122- 98 மதிப்பெண்ணும் பெற்றேன்..
எங்கள் ஊரே என்னை பாராட்டியது, சந்தோச சாரலில் இருந்த என் குடும்பத்திற்க்கு பின்னால் வரப்போகும் வெய்ட்டேஜ் என்னும் விசத்தை பற்றி தெரியவில்லை...
பின் வெய்ட்டேஜ் ஜி.ஓ 71ஆல் எனக்கு இரண்டு தாள்களிலும் பணிநியமன பட்டியலில் இடம்பெறவில்லை. அன்றிரவே தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய துணிந்தேன் ஆனால் முடியவில்லை அன்றும் என் உயிராக நின்னைக்கும் ஆசிரியர் கனவு தடுத்து விட்டது...
மொத்ததில் சொல்லப்போனால் என் ஆசிரியர் கனவையே குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.. தினமும் கண்ணீரிலே தலையணைகள் நனைகின்றன...
நான் என்ன பாவம் செய்தேன் ... நான் பிறந்தது குற்றமா?? இல்லை படித்தது குற்றமா?? இல்லை ஆசிரியர் பணியை லட்சியமாக கொண்டது குற்றமா?? என் ஆசிரியர் கனவை நிறைவேற்ற எத்தனை வலிகள்...
இறைவா என்னையும் என்னை போன்றோரை காப்பாற்ற வழியே இல்லையா????
Article by
P.Rajalingam Puliangudi...
நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை:வழக்கம் போல் இயங்கும்.
பள்ளிக்கல்வித்துறை தலையீட்டால் தனியார் பள்ளிகள் முடிவில் மாற்றம். நாளை விடுமுறை இல்லை. ஜெயலலிதாவிற்கு ஆதரவாக, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நாளை மூடப்படும் என்று முன்னதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும், விடுமுறை இல்லை என அறிவித்துள்ள கூட்டமைப்பு, பள்ளி தாளாளர்கள் மட்டும் திட்டமிட்டபடி, உண்ணாவிரதப் போராட்டத்தில் நாளை ஈடுபடுவார்கள் என்று கூறி உள்ளது.
Subscribe to:
Posts (Atom)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...