22 January 2014

சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (22.01.14) வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் TET வழக்குகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.மேலும் வழக்குகளை விசாரிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட தலைப்புகளில் எந்த தலைப்பின்கீழ் தாங்கள் தாக்கல் செய்த வழக்கு இடம்பெறுகின்றது என வழக்கறிஞர்கள் 24.01.2013 க்குள் நீதிமன்ற அலுவலகத்தில் தெரிவிக்கும்படி நீதியரசர் சுப்பையா உத்தரவிட்டுள்ளார். 

I.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER I 
II.CHALLENGING KEY ANSWERS TET EXAMS PAPER II 
III.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS - WITH THE NAME OF THE SUBJECT. 
IV.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL. V.WRIT PETITIONERS CLAIMING UNDER PERSONS STUDIED TAMIL MEDIUM 
VI.WRIT PETITIONERS CLAIMING EQUIVALENCE IN THEIR DEGREES 
VII.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF REVERSE DEGREES 
VIII.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF DUAL DEGREES. 
IX.NON SELECTION FOR CERTIFICATE VERIFICATION ON THE GROUND OF SIMULTANEOUS DEGREES. 
X.CHALLENGING THE RATIO 1: 1 IN CALLING FOR CERTIFICATE VERIFICATION. XI.OTHER CATEGORIES WITH SPECIFICATIONS. வழக்குகள் மேற்கண்ட தலைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு அடுத்தவாரம் விசாரிக்கப்படும் எனத்தெரிகின்றது.
வெயிட்டேஜ் முறை அறிமுகத்தால் மூத்த ஆசிரியர்கள் அவதி! 

இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால், சீனியாரிட்டியில் முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பணி அனுபவத்திற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க மூத்த ஆசிரியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு மூன்றாவது முறையாக, தமிழகத்தில் நடத்தப் பட்டது. இதில், சுமார் 6 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். இதில், முதல் தாளுக்கான தேர்வில் 12 ஆயிரத்து 433 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 3000 இடைநிலை ஆசிரியர்கள் நிரப்பப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

இதற்காக, பாடவாரியாக காலி பணியிடங்களை தொகுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது, முடிவடைந்ததால், பட்டதாரி ஆசிரியர்கள் போன்று, வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்தது. 

அதன் படி, தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வரும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், வேலைவாய்ப்பு பதிவுக்கு முன்னுரிமை குறித்து எவ்வித தகவல்களும் பெறப்படவில்லை. பணி அனுபவத்திற்கும் மதிப்பில்லாததால், மூத்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெயிட்டேஜ் முறையில், இடைநிலை ஆசிரியர்கள் தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண், ஆசிரியர் பட்டயத்தேர்வு மதிப்பெண் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு பணி நியமனம் செய்யப்படவுள்ளது. 

தற்போதைய கல்வி முறையும், மதிப்பெண் வழங்கும் முறையும், 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு இருந்த கல்வி முறை, மதிப்பெண் வழங்கும் முறையை ஒப்பிடுவது என்பது சரியாக அமையாது. இதுகுறித்து, கோவை மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ""கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மாவட்ட அளவில் சீனியாரிட்டி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டுவந்தனர். பின்பு, மாநில அளவில் சீனியாரிட்டி என்று மாற்றப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டனர். 

தற்போது, சீனியாரிட்டியில் முன்னிலையில் இருக்கும் என்னை போன்றோர், வெயிட்டேஜ் முறையால் பின்னுக்கு தள்ளப்படும் வாய்ப்பு எழுந்துள்ளது. 20 வருட அனுபவங்களுடன் காத்திருக்கும் என்னை போன்ற பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணி அனுபவத்திற்கும், வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுக்கவேண்டியது அவசியம்,'' என்றார்.
குரூப் -1 பிரதான தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மறு தேர்வு நடத்தும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது ஆந்திர பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையம், 2011ம் ஆண்டு நடத்திய, குரூப் -1 பிரதான தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மறு தேர்வு நடத்தும்படி, சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டுள்ளது. ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையம், 2011ம் ஆண்டில், குரூப் - 1பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தியது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு என, இரு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. முதல் நிலை தேர்வில், கேள்வித்தாள்களில், சில தவறுகள் இருந்ததாக, தேர்வாளர்கள் குற்றம் சாட்டினர். எனவே, பிரதான தேர்வு பங்கேற்கப்பவர்களை தேர்ந்தெடுக்க வேண்டாம். மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் எனக் கோரி, பல விண்ணப்பதாரர்கள், ஆந்திர ஐகோர்ட்டில்மனு செய்தனர். இதற்கிடையில், முதல் நிலை தேர்வில் பங்கேற்றவர்களில் இருந்து, 16 ஆயிரம்பேரை தேர்ந்தெடுத்து, பிரதான தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.இதில், 9,000 பேர்மட்டுமே பங்கேற்றனர். விண்ணப்பதாரர்களின் மனுவை விசாரித்த, ஆந்திர ஐகோர்ட், பிரதான தேர்வை, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நடத்தும்படி, ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையம், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வாதாடிய வக்கீல் கூறுகையில், 'அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து, 209 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்' என, கூறினார். இரு தரப்பு வாதங்களையும், கேட்ட சுப்ரீம் கோர்ட், 2011 குரூப்-1 பிரதான (மெயின்) தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதுகுறித்து, ஆந்திர பிரதேச அரசு தேர்வாணைய அதிகாரி கூறுகையில், 'சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் நகலை பார்த்தபிறகு தான் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்' என்றார். ஆந்திர அரசு பணியாளர்தேர்வாணையம், பிரதான தேர்வில் பங்கேற்றவர்களில் இருந்து, 300 பேரை தேர்வு செய்து, நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, பிரதான தேர்வில் பங்கேற்றவர்கள், நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள் மீண்டும் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
இன்று( 22.01. 14) முதுகலை ஆசிரியர்தமிழ் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகின்றது
TNTET 2013 news update சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (250 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாகபட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாளை 22.01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி வழக்குகள்பட்டியலிடப்பட்டுள்ளது.நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதால் TET வழக்குகள் நாளை விசாரிக்கப்படுமா என்பது மாலையில்தான் தெரியவரும். GROUPING MATTERS- PAPER I ~~~~~~~~~~~~~~~~ 1. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT 2. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER IFILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES 3.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER I CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~ - GROUPING MATTERS- PAPER II 4. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II WHERE PETITIONERS HAVE PASSED THE EXAMS IN THE REVISED RESULTS AND NO FURTHER ORDERS REQUIRED 5. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT 6. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II FILED AFTER 26.11.2013 HIT BY DELAY AND LACHES 7.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS PAPER II CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED Total no of writs 122
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை விவகாரம் - தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு: ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்படும். பள்ளி நிர்வாகத் தினர் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஏற்ப மதிப்பெண் சலுகை வழங்கலாம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதல் விதிமுறையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எந்த தகுதித் தேர்விலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்படவில்லை.பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நடத்தும் நெட் தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.), ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. முதல் 2 தாள்களில் பொதுப் பிரிவினர் தேர்ச்சி பெற தலா 40 சதவீத மதிப்பெண்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 சதவீத மதிப்பெண் போதுமானது. உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மதிப்பெண் சலுகை வழங்கக் கூடாது என்று உத்தரவிடவில்லை. எனவே, என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குமதிப்பெண் தளர்வு வழங்காமல் மறுத்து வருவது சட்டவிரோதம். எனவே, ஆதிதிராவிடர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு.. உடனடியாக ஒத்தி வைக்க தமிழக அரசிடம் சீமான் வலியுறுத்தல்  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்ட...