Posts

Showing posts from July 13, 2022
Image
  தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை ஜூலை 19-க்குள் முடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உத்தரவு அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை ஜூலை 19-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று 24 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 13,331 இடைநிலை ஆசிரியர், பட்டதாரிஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும்போட்டித்தேர்வு நடத்தி இப்பணியிடங்களை நிரப்ப காலதாமதம் ஆகும்என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா பிரேம்குமாரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை வ
Image
 TRB Polytechnic Recruitment: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்கள்: போலித்தகவல்களை நம்ப வேண்டாம் - டிஆர்பி அறிவிப்பு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்கள் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான அரசு‌ பல் தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ 1060 விரிவுரையாளர்‌ காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்‌ மூலம்‌ பணித்தெரிவு செய்வது சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு, கணினி வழித்‌ தேர்வுகள்‌ 08.12.2021 முதல்‌ 13.12.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள்‌ 08.03.2022 அன்று ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்‌டன. 11.03.2022 நாளிட்ட ஆசிரியர்‌ தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில்‌, பணிநாடுநர்கள்‌ தங்களது கல்வித்‌ தகுதி மற்றும்‌ பணி அனுபவம்‌ தொடர்பான கூடுதல்‌ சான்றிதழ்களை/ ஆவணங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ வழியாக 11.03.2022 முதல்‌ 01.04.2022 வரை பதிவேற்றம்‌ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. பணிநாடுநர்கள்‌ விண்ணப்பத்துடன்‌ பதிவ
Image
  குரூப் 4 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும்? தமிழ அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் குரூப் 4 தேர்வு 2022 ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர். இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், இந்த வார இறுதிக்குள் குரூப் 4 தேர்வு 2022 ஹால் டிக்கெட் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குரூப் 2 தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக ஹால் டிக்கெட் வெளியிடப்பட்ட நிலையில், குரூப் 4 தேர்வுக்கும் அதேபோல் வெளியிடப்படலாம் என தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூறுகின்றனர். வழக்கத்துக்கும் மாறாக இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், வினாத்தாள் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் தேர்வுக்கு தயாராவோரிடம் இருக்கிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளில், அதிகமானோர் விண்ணபித்தபோதெ
Image
  பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு சென்னை: பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கலாம். மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.