11 July 2022

 எம்.பி.ஏ. / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு ( MBA / MCA ) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் அரசு / அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக் கழகம் / துறைகள் ( University Departments ) / வட்டார மையங்கள் ( Regional Centers ) / அண்ணாமலை பல்கலைக்கழகம் / சென்னை பல்கலைக் கழகம் / இதர பல்கலைக் கழகங்கள் / சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் , சென்னை 600 025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் , சென்னை 600 006 அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு ( MBA / MCA ) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள் : 


1 ) விண்ணப்பிக்கும் முறை :


 www.gct.ac.in , www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக தேவையான சான்றுகளுடன் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . 


2 ) விண்ணப்பதாரர்கள் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.


 இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் முடிவுறும் நாள் : 05.08.2022 துவங்கும் நாள் : 11.07.2022 


3 ) பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்தலாம் . 


4 ) இந்த கல்வியாண்டில் எம்.பி.ஏ / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு , சான்றிதழ் பதிவேற்றம் , சான்றிதழ் சரிபார்ப்பு , கல்லூரி தேர்ந்தெடுத்தல் , தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் . 


5 ) மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in / www.tn-mbamca.com இணையதள முகவரியில் " INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES " பக்கத்தில் பார்க்கவும்.


தொடர்பு எண் .0422 / 2451100 


வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை






 தற்காலிக ஆசிரியர்கள் ஜூலை 20க்குள் பணியில் சேரவேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு



தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது

இது குறித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


ஜூலை 15-ஆம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்யஅனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வானவர்கள் பட்டியலை சரிபார்த்து ஜூலை 18ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் தேர்வானவர்கள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்.. தமிழக முதல்வருக்கு முக்கிய கோரிக்கை..!!!



பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளனர்.


தமிழக முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களை மூப்பு அடிப்படையில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு கடந்த 2012-ம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்களாக தேர்ந்தெடுத்தனர். இந்த ஆசிரியர்கள் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு பாடங்களை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட 16,549 ஆசிரியர்களுக்கும் ரூபாய் 5000 மாதந்தோறும் சம்பளமாக வழங்கப்பட்டது.


கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் ரூபாய் 10,000 சம்பளமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் ஆணையானது பிறப்பிக்கப்படவில்லை.


இந்நிலையில் 100 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் மட்டுமே சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையை மாற்றி ஒரு பள்ளிக்கு ஒரு சிறப்பாசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடர்பாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு எழுதி அனுப்பியுள்ளனர்.

 உயர்கல்வி கவுன்சிலிங்: புதுச்சேரியில் தேதி அறிவிப்பு




புதுச்சேரியில், இளநிலை உயர் படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங்கிற்கு, வரும் 20ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: புதுச்சேரி அரசின், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், 'நீட்' அல்லாத பிற இளநிலை உயர் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது.


வரும் 20ம் தேதி மாலை 5:00 மணிவரை, மையப்படுத்தப்பட்ட சேர்க்கைக் குழுவிற்கு (சென்டாக்) விண்ணப்பிக்கலாம்.


இதில், நீட் அல்லாத இளநிலை தொழிற்முறை படிப்புகளில் 4,954 இடங்கள், கலை அறிவியல் படிப்புகளில் 4,260, இளநிலை நுண்கலை பிரிவில் 90, லேட்ரல் என்ட்ரி பிரிவில் 403, உயிரியல் சார்ந்த பட்டய படிப்பு பிரிவில் 190 என மொத்தம் 10 ஆயிரத்து 804 இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது.


 விண்ணப்பங்களை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி-அன்புமணி ராமதாஸ்



தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.



இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.


நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


தற்காலிக ஆசிரியர்களாக இப்போது நியமிக்கப்படுபவர்கள், எதிர்காலத்தில் பணி நிலைப்பு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில், அப்போது இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படும் என்பதால் இது போக்க முடியாத சமூக அநீதியாக அமைந்து விடக்கூடும்.


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளை நடத்தி, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 ஆசிரியர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.


இதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 28,984 பேர் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 50,648 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்விலும், மதுரை அமர்விலும் தொடரப்பட்டுள்ள இரு வழக்குகள் காரணமாக தற்காலிக ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை தடைபட்டிருக்கிறது.


உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால், எந்த நிமிடமும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடங்கி உடனடியாக முடிக்கப்படும். ஆனால், 13,331 ஆசிரியர்களை நியமிப்பதில் இடஒதுக்கீட்டை கடைபிடிப்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்களில் இதுபற்றி கேட்டபோது, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பள்ளிகள் அளவில், பள்ளி மேலாண்மை குழுவால் மேற்கொள்ளப்படவிருப்பதால், அதில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று விளக்கம் கிடைத்திருக்கிறது.


இந்த விளக்கத்தை ஏற்கவே முடியாது. நியமன நடைமுறைகளை காரணம் காட்டி இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என்று பள்ளிக் கல்வித் துறையே கூறுவது தமிழ்நாட்டில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக நீதிக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.


இந்த சமூக அநீதியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரித்து, மாநில அளவில் கலந்தாய்வு நடத்தி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக மட்டும்தான் அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவும், சமூக நீதியை பாதுகாக்கவும் முடியும் என்பதை தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உணர வேண்டும் என்று அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

 TN TET தேர்வு 2022.. இன்று (ஜூலை 11) முதல் ஜூலை 16 வரை.. விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!!!




தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.



அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டெட் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நடப்பு ஆண்டில் இந்த தேர்வுகளை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது.


இந்த தேர்வில் கலந்து கொள்ள தமிழக முழுவதும் சுமார் 6.3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த மாதம் இறுதியில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. என் நிலையில் கடந்த மாதத்துடன் முடிவடைந்த TETதேர்வுக்கான விண்ணப்ப பதிவில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் இன்று ( ஜூலை 11) முதல் 16 ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...