Posts

Showing posts from May 18, 2023
Image
  TNEA 2023: பொறியியல் கவுன்சலிங்; எந்த கோர்ஸ் படிக்கலாம்? வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் எவை? பொறியியல் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டவுன் உங்களுக்கு எந்த ரவுண்ட் கவுன்சலிங் வரும் என்பது தெரிந்துவிடும்.  மாணவர்களிடையே எழுந்துள்ள முக்கியமான கேள்வி, எந்த கோர்ஸ் படிப்பது? எந்த கோர்ஸ் படித்தால் எதிர்காலத்தில், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது? இதற்கு கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி அவர்களது விளக்கம்: இனிவரும் காலங்களில், குறிப்பிட்ட பாடப்பிரிவு என்பதை விட, முக்கிய பாடப்பிரிவுகள் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்துள்ளதால், அனைத்து முக்கிய பாடங்களை உள்ளடக்கிய பாடப்பிரிவை, சிறந்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொள்ளுங்கள். குறிப்பாக எதிர்காலத்திற்கு க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் இன்றியமையாததாக உள்ளதால், இந்த பாடங்கள் இருக்கும் பிரிவுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. எனவே இந்த ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்கும். அதி
Image
 பி.காம்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு கடும் போட்டி மாநில அளவில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில், இதுவரை, 1,73,895 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், பி.காம்., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களுக்கு, மாணவர்கள் முன்னுரிமை கொடுத்து விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில், 164 கலை அறிவியல் கல்லுாரிகள், ஏழு கல்வியியல் கல்லுாரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் முறையில், கடந்த 8ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. நாளை, 19ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பங்களை வழங்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.கடந்த கல்வியாண்டில், அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 2,98,400 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். நடப்பாண்டுக்கான விண்ணப்ப பதிவுகளின்படி இதுவரை, 1,73,895 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.பி.காம்., பி.காம்., சி.ஏ., மற்றும் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய மூன்று பாடங்களுக்கு, அதிக முன்னுரிமை அளித்து விண்ணப்பித்துள்ளனர். தனியார் கல்லுாரிகளை பொறுத்தவரையிலும், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பாடப்பிரிவுகளுக்கு
Image
  கலை, அறிவியல் படிப்புகள்: 2.37 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு தமிழகத்தில் கலை, அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (மே 19) நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை 2 லட்சத்து 37,985 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. கல்லூரி மாணவா் சோக்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த மே 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 985 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 009 போ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். இந்த நிலையில் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவா்கள் http://www.tngasa.in எனும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பின் சோக்கை கலந்தாய்வு (கல்லூ