Posts

Showing posts from October 3, 2022
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை நேரடியாக ஆசிரியராக அமர்த்த வேண்டும்! - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித்தேர்வு, பின் போட்டித்தேர்வு என இரு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க அரசு முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 9 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள
Image
 ` முதல்வர் ஸ்டாலினிடம் பிச்சை கேட்கிறோம்; வேலை கொடுங்கள்'- உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆசிரியைகள் கண்ணீர் முதல்வர் ஸ்டாலினிடம் பிச்சை கேட்கிறோம். எங்களுக்கு வேலை கொடுங்கள்'' என்று டெட் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியைகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், கடந்த 2013-ல் நடந்த அதிமுக ஆட்சியில் ஆசிரியர் தகுதி தேர்வு எனப்படும் டெட் தேர்வு கொண்டுவரப்பட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியராக பணியாற்ற முடியும். அதன்படி கடந்த 2013, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை பிஎட் முடித்தவர்கள் எழுதினார். இதில் 30 ஆயிரம் தேர்ச்சி பெற்றனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் இவர்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை. இதனிடையே, டெட் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் மீண்டும் ஒரு தேர்வை எழுத வேண்டும் என்று தமிழக அரசு திடீரென அறிவித்தது. இதற்கு டெட் தேர்வு தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருந்
Image
  .B.Ed. படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! B.Ed. படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் B.Ed படிப்புகளில் சேர செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்த விபரங்களை மாணவர்கள் https://www.tngasaedu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் அக்டோபர் 6-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என்றும் அக்டோபர் 12ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே B.Ed மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed மாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு கட்டாயம் என்றும் இளைய தளம் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தனியார் கல்லூரியில் சேர அந்தந்த கல்லூரி இணையதளத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.