Posts

Showing posts from December 16, 2022
Image
  அதிருப்தி அளிக்கும் டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டம்.. அவுட்சோர்சிங் முறையை கொண்டுவர அரசு திட்டமா? அண்மையில் வெளியான 2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டத்தால் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், 'அவுட்சோர்சிங் முறை'யில் பணி நியமனம் செய்ய அரசாணை 115-ஐ செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதோ?என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission - TNPSC) மூலம் நேற்று டிச.15 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட, வரும் 2023ஆம் ஆண்டு போட்டித் தேர்விற்கான அட்டவணையில் குறைந்த எண்ணிக்கையில் பணியிடங்கள் காண்பிக்கப்பட்டுள்ளதால்,அவுட்சோர்சிங் முறையில் (Outsourcing method) பணி நியமனத்திற்கு வெளியிடப்பட்ட அரசாணை 115-ஐ செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குரூப்-1 மற்றும் குரூப்-2 பணியிடங்களுக்கு 2022 ஆண்டிற்கான அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களுடன், 2023ஆம் ஆண்டில் முதன்மைத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சேர்க்கப்படும் என டிஎன
Image
  திமுக ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றீர்களே.. என்னாச்சு? -ராமதாஸ் தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை டிஎன்பிஎஸ்சி கலைப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் புள்ளி விவரங்களோடு புட்டு புட்டு வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் 2023ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுவது ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புள்ளி விவரத்தோடு வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு; அரசுப் பணியாளர் தேர்வாணையம்   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படவுள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. நான்காம் தொகுதி தேர்வுகள் தவிர்த்து, ஒராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்படவுள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது. இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதல்ல. போட்டித் தேர்வுகள்   அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி அடுத்த ஆண்டில
Image
  TNPSC Recruitment: ஓராண்டில் வெறும் 1754 நியமனங்களா? டிஎன்பிஎஸ்சி புதிய வேலைகளை உருவாக்க வேண்டும்- ராமதாஸ் டிஎன்பிஎஸ்சி மூலம் ஓராண்டில் 1754 நியமனங்கள் போதுமானவையல்ல. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படவுள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. குரூப் 4 தேர்வுகள் தவிர்த்து, ஒராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டும்தான் நிரப்பப்பட உள்ளது ஏமாற்றமளிக்கிறது. இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதல்ல. அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி அடுத்த ஆண்டில் மொத்தம் 11 போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்படவுள்ளன. இவற்றில் 8 போட்டித் தேர்வுகள் 2023-ஆம் ஆண்டிலும், 3 போட்டித் தேர்வுகள் 2024-ஆம் ஆண்டிலும் நடத்தப்படும். 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கும் குரூப
Image
  பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவக்கம் தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளிலும், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு, இன்று துவங்குகிறது. முதலில் மொழிப் பாடத்துக்கும், பின், அறிவியல், கணிதம், பொருளியல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது. மாவட்ட அளவில், பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. வினாத்தாள்களை ஆசிரியர்கள், பணியாளர்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும், 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிகின்றன. இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
Image
  நீட் நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 படித்து முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்றவற்றில், இன்ஜினியரிங் இளநிலை படிப்பில் சேர்வதற்கு, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், நாடு முழுவதும் பிளஸ் 2 முடித்து, மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இது தவிர நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில், இளநிலை மற்றும் முதுநிலை சேர்வதற்கு, மத்திய பல்கலை பொது நுழைவு தேர்வு என்ற கியூட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை, நேற்று இரவு வெளியிட்டது. ஜே.இ.இ., மெயின் தேர்வு முதல் கட்டமாக, ஜனவரி 24 முதல் 31 வரை நடக்கிறது. ஜன., 24, 25, 27, 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டம் ஏப்., 6, 8,10, 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்தப்படுகி