Posts

Showing posts from November 16, 2014
விஏஓ தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை நீண்டகாலமாக வெளியிடப்படாமல் இருக்கும் விஏஓ தேர்வு முடிவுகளை வெளியிட ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மையம் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி 2,324 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்துத் தேர்வு நடத்தியது. இதில் லட்சக்கணக்கான இளைஞர்களும், பெண்களும் பங்கேற்று எழுதினர். இந்நிலையில் தேர்வு எழுதி, ஐந்து மாதங்கள் நிறைவடைந்த நிலையிலும் தேர்வு முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. முன்னரே இப்பணிக்கு தேர்வான பலரும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் எழுதி உயர்பதவிகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் பல கிராம நிர்வாக அலுவலர்களும் கூடுதலாக இரண்டு அல்லது மூன்று கிராமங்களை கவனித்து வருகின்றனர். ஆகவே, இவர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக பள்ளிக்கூடம்.காம் தேர்வு எழுதிக் காத்திருப்பவர்கள் நலனை கருத்தில் கொண்டு விஏஓ தேர்வு முடிவுகளை உடனே வெளியிட்டு பணிநியமனம் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.