Posts

Showing posts from August 31, 2022
Image
  10, 12 ஆம் வகுப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு; மத்திய அரசு திட்டம் Govt proposes a new regulator for 'uniformity' in all board exams: மாநில மற்றும் மத்திய கல்வி வாரியங்களில் தற்போது பல்வேறு தரநிலைகளை பின்பற்றி வருவது, மதிப்பெண்களில் பரவலான ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கிறதால், மாநில மற்றும் மத்திய வாரியங்கள் முழுவதும் 'ஒரே சீரான தன்மையை' கொண்டு வர, இடைநிலை மற்றும் மேல்நிலை நிலைகளில் மாணவர்களை மதிப்பிடுவதற்கு ஒரு 'பெஞ்ச்மார்க் கட்டமைப்பை' உருவாக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) மாநில வாரியங்கள் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்களின் (SCERT) பிரதிநிதிகளுடன் ஒரு தொடர் கூட்டங்களை நடத்தி திட்டத்தைச் செயல்படுத்த ஒரு பொதுவான புரிதலுக்கு வந்துள்ளது, அதன் ஒரு பகுதியாக புதிய மதிப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுகிறது. இதையும் படியுங்கள்: செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது? சென்னை பல்கலை. அறிவிப்பு திட்டமிடப்பட்டுள்ள ஆணையம் PARAKH (செயல்திறன் மதிப்பீட
Image
  அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை - செப்.5-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார் அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை ஆசிரியர் தினமான செப்.5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்கிறார். தமிழக அரசின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில், இத்திட்டம் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உதவி திட்டமாக மாற்றப்பட்டது. அதன்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, திட்டத்தில் பயனாளிகளாக சேர, பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகி்ன்றனர். இத்திட்டத்துக்காக ரூ.698 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைந