Posts

Showing posts from January 5, 2014
கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக் குறையால்,பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் கேள்விக்குறி  மேல்நிலைப் பள்ளி களில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், ஓர் ஆசிரியர், இரண்டு பள்ளிகளில் பாடம் நடத்த, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதனால், பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் கேள்விக்குறியாகி உள்ளது. தகுதித் தேர்வை காரணம் காட்டி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை, அரசு, 'டிஸ்மிஸ்' செய்தது.  இதனால், பள்ளிகளில், கம்ப்யூட்டர் பாடம் கற்றுக் கொடுப்பதில், மாநில அளவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால், ஒரு பள்ளியில் பணியாற்றும், கம்ப்யூட்டர்ஆசிரியர், மற்றொரு பள்ளியில், கூடுதல் பணியாற்ற வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அடுத்த மாதம், கம்ப்யூட்டர் செய்முறை தேர்வு, மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்கிறது. ஆனால், தேர்வுக்கு முன், பாடத்திட்டங்களை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் விழி பிதுங்கி உள்ளனர். பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர் இல்லாததால், வேறு பாடம் நடத்தும்ஆசிரியர்கள் கம்ப்யூட்டர் பாடம் நடத்துகின்றனர்.  இதன
சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் வழக்குகள் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள் வரும் திங்களன்று (06.01.2013 ) நீதியரசர் சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. அவை கீழ்கண்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.  WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD ON VARIOUS GROUNDS (FOR RECRUITMENT) ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 1.EQUIVALENCE  2.TAMIL MEDIUM QUOTA  3.CERTIFICATE NOT PRODUCED (DURING CERTIFICATE VERIFICATION)  4.TEACHERS ELIGIBILITY TEST - CLARIFICATION  5.TEACHERS ELIGIBILITY TEST FOR SERVICE CANDIDATE  6.CERTIFICATAE VERIFICATION  7 NOT PRODUCED CERTIFICATE  8 ONE YEAR DEGREE  9.TWO DEGREE STUDIED IN SAME CALENDER YEAR  10.CANCELLATION OF APPOINTMENT  11.AWARDING OF WEIGHTAGE MARKS  12.CERTIFICATE VERIFICATION NOT PRODUCED PUC  13.NOT SELECTED AFTER THE CERTIFICATE VERIFICATION  மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் ப
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும், மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர். அவ்வழக்குகள் வரும் திங்களன்று (06.01.2014) அன்று விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசின் மேல்முறையீட்டு மனுவும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை நீதியரசர்கள் சுதாகர், வைத்தியநாதன் அமர்வுக்குமுன் (06.01.2014) அன்று பட்டியலிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன
15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை வழங்க அரசு சுறுசுறுப்பு!: தேர்தல் அறிவிப்புக்கு முன் முதல்வர் தலைமையில் விழா  லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது. குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது. பணி நியமன உத்தரவு:கடந்த, 2012, டிசம்பரில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் பங்கேற்று, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். அதன்பின், மீண்டும் பெரிய அளவிலான பணி நியமனம், விரைவில் நடக்க உள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 12 ஆயிரம், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரும், தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆ