Posts

Showing posts from June 22, 2022
Image
  ஓரிரு நாள்களில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்: அன்பில் மகேஷ்   11-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகேயுள்ள பில்லர் மையத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சியை அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், வருகின்ற 2025-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே பள்ளிக்கல்வித் துறையில் தமிழகம் சிறப்பான இடத்தைப் பெற்றுத் திகழும். அதற்கான அடித்தளத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  தொடக்கக் கல்வித் துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசுப் பள்ளிகளை நோக்கி நிறைய குழந்தைகள் வரத் தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு வேண்டாம் என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் மாநில கல்விக் கொள்கையை அறிவித்துள
Image
  ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு"- அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புற அரசுhd பள்ளி மாணவர்களுக்கான STEM என்ற கோடைக்கால பயிற்சி திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் நூறு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக சென்னை ஐஐடி சார்பில் ஜூன் 20 முதல் 25 ஆம் தேதி வரை பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற அரசுப் பள்ளியின் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த 6 நாள் பயிற்சி வகுப்பு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் காகர்லா உஷா, ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர். திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்ச
Image
  அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மைக்ரோபயாலஜி பாடத்தில் தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு மாணவி 100 மதிப்பெண் எடுத்துள்ளார் அதுவும் அவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டார். மேலும், இனிவரும் காலத்தில் நமது கல்விமுறை மேம்படுத்துவதில் நாம் இன்னும் உழைக்க வேண்டும் எனவும் அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பல திட்டங்களை நாம் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் கொண்டு வருகிறோம், நம் மீது மக்களுக்கு நம்பிக்கை
Image
  தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு 152 பட்டதாரிகள் தேவை: விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெல்லோஷிப்  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திட்டத்தின் பெயர்: Tamil Nadu Education Fellowship காலியிடங்கள்: 38 சம்பளம்: மாதம் ரூ.45,000 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணி: Fellows காலியிடங்கள்: 114 சம்பளம்: மாதம் ரூ.32,000 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:  விண்ணப்பத்தாரரின் தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விண்ணப்பத்தாரர் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்ட
Image
  நாளை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் வெளியீடு!!  பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு 5 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிபிஎஸ்சிஇ தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றும், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜூலை 8வரை விண்ணப்பிக்கலாம் எனவும், இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் காலி பொறியியல் இடங்கள் உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இந்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Image
  அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பம்.. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 22 ஆம் தேதி இன்று முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22 ஆம் தேதி முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பதிவு கட்டணம் மட்டும் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பக்கட்டணங்களை ஆன்ல
  பிளஸ் 1ல் சேர்க்கை பள்ளிகளுக்கு அறிவுரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கையில், மதிப்பெண் தரவரிசைப்படி, மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகளை ஒதுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், பிளஸ் 1 சேர்க்கை தொடர்பாக, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி முதன்மை செயலர்கள் தரப்பில், அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பள்ளிகளும், மாணவர்களின் விண்ணப்பங்களை பெற்று, கால அவகாசம் நிர்ணயித்து, அதன்பிறகே மதிப்பெண், இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்றி, தரவரிசை பட்டியல் தயாரிக்க வேண்டும்.  இறுதியாக, விதிகளை பின்பற்றி, மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். மாறாக தங்களின் விருப்பத்துக்கு பாடப் பிரிவுகளை ஒதுக்குவது, சிபாரிசு அடிப்படையில், தேவையான பாடப்பிரிவுகளை வழங்குவது போன்ற விதிமீறல்கள் இருக்கக் கூடாது. இது குறித்து, புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர் சேர்க்கை குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்