16 June 2014

ஆசிரியர் பணிநிரவல்:டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல் அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணிநிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். 2011 செப்.,1 ல் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை படி, ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். அவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்யவேண்டுமென தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2,900 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், பணிநிரவல் மூலம் உபரி ஆசிரியர்களால் நியமிக்கப்பட உள்ளது. இதனால், 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையினர் கூறுகையில், "" ஆசிரியர் பணியிடங்கள் குறையாமல் இருக்க ஆங்கில வழி கல்வியை துவங்கி, மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து வருகிறோம்,'' என்றார்.
முப்பருவ கல்வி முறை; திண்டாடும் மாணவர்கள்; ஆசிரியர்கள் கவலை. முப்பருவ கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், குறைந்த மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஒரே புத்தகத்தை படித்து, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுஎன தேர்வு எழுதும் வழக்கத்தில் இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் மாறுதல் செய்யப்பட்டது. புதிய முறைப்படி, நான்கு மாதங்களுக்கு ஒரு பருவம் என்ற அடிப்படையில் முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என புத்தகங்களை மூன்றாக பிரித்து, பாடம் நடத்தி தேர்வுநடத்தப்படுகிறது.ஒவ்வொரு பருவத்தேர்வும் முடிந்த பிறகு, அவர்கள் படித்த பாடப்புத்தகம், அதன்பின், தேவைப்படுவது இல்லை. அந்த பாடங்களை மாணவ, மாணவியர் மறந்து விடுகின்றனர். அடுத்த பருவத்துக்கான பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.முப்பருவ கல்வி முறையில் படித்து வரும் மாணவ, மாணவியர் அடுத்தகல்வியாண்டில், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்விமுறை இல்லை. காலாண்டு, அரையாண்டு, பொதுத்தேர்வு எழுத வேண்டும். ஆண்டு முழுவதும் படித்த மொத்த பாடங்களையும், பொதுத்தேர்வில் எழுத வேண்டும். முப்பருவ கல்வி முறையில் குறைந்த பாடங்களை மட்டுமே படித்து, தேர்வு எழுதி பழகிய மாணவர்கள், ஆண்டு முழுவதும் படித்த பாடங்களை, பொதுத்தேர்வின் போது ஒட்டுமொத்தமாக படிப்பதும், அதற்கான வினாக்களுக்கு பொதுத்தேர்வில் பதில் அளிப்பதும் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால், பல மாணவர்களின் மதிப்பெண் கணிசமாக குறையக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "தனியார் பள்ளிகளில், முப்பருவ தேர்வு முறை இருந்தாலும், மூன்றாம் பருவ தேர்வின்போது மூன்று பருவ பாடங்களையும் மொத்தமாக வைத்தே, தேர்வு எழுதப்படுகிறது. அரசு பள்ளிகளில் அம்முறை பின்பற்றுவதில்லை. ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றாலும், அக்கறை காட்டாமல் உள்ளனர்,' என்றனர்.
ஜூலை யில் போட்டித் தேர்வு அறிவிப்பு :அரசு பொறியியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர் அரசு பாலிடெக்னிக், அரசு பொறியியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. தமிழகத்தில் 10 அரசு பொறி யியல் கல்லூரிகள், 40 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன.பொறியியல் கல்லூரிக ளில் உதவி பேராசிரியர் பணியி டங்களும், பாலிடெக்னிக்கில் விரிவுரையாளர் பணியிடங்களும் நேரடியாக நிரப்பப்படுகின்றன. இதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்து கிறது. இந்த ஆண்டு அரசு பாலிடெக் னிக்கில் 605 விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் 143 உதவி பேராசிரியர்களை நிய மிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து, இப்பணியிடங் களில் பாடப்பிரிவு வாரியான காலியிடங்கள் பட்டியல் ஆசிரி யர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது.748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான அறிவிப்பை ஜூலை யில் வெளியிட முடிவு செய்யப் பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .பொறியியல் அல்லாத 220 பணியிடம் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி ஆங்கி லம், கணிதம், இயற்பியல், வேதி யியல் உள்ளிட்ட பொறியியல் அல்லாத பாட ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். அந்த வகை யில், பொறியியல் அல்லாத பாடப் பிரிவு இடங்கள் பாலிடெக்னிக்கில் 200-ம், பொறியியல் கல்லூரிகளில் 20-ம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித் தகுதி, வயது வரம்பு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியைப் பொருத்தவரையில், பொறியியல் பாடப்பிரிவுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டம் வேண்டும். பொறியியல் அல்லாத பிரிவுகளுக்கு முதல் வகுப்பு முதுநிலை பட்டம் தேவை. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு பொறியியல் பிரிவுக்கு பி.இ. அல்லது எம்.இ. படிப்பில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணு டன் முதுநிலை பட்டம் அவசியம். அதோடு, யுஜிசி 'நெட்' அல்லது 'ஸ்லெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விரிவுரையாளர், உதவி பேராசிரி யர் பணிகளுக்கு வயது வரம்பு கட்டுப்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'ஆசிரியர் நியமனத்தில் தெளிவான கொள்கை இல்லை': அகில இந்திய ஆசிரியர் சங்க நிர்வாகி குற்றச்சாட்டு பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் (ஒரு பள்ளியில் கூடுதலாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றுதல்) கலந்தாய்வு, வரும், 26ம் தேதியும், தொடக்க கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு, வரும், 18ம் தேதியும் நடக்கிறது. இரு துறைகளிலும் சேர்த்து, 3,000த்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர். சென்னை நகரில் இருந்து, 200க்கும் அதிகமான ஆசிரியர்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் அல்லது திருவண்ணாமலை மாவட்டங்களுக்கோ, தூக்கி அடிக்கப்படலாம். தவிப்பு இந்த ஆண்டு, பணி நிரவல் கலந்தாய்வு நடப்பது குறித்த தகவல், இரு மாதங்களுக்கு முன் வெளியானது. அப்போது முதல், ஆசிரியர்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.ஒவ்வொரு பள்ளியிலும் கூடுதலாக உள்ள ஆசிரியரில், 'ஜூனியர்' யாரோ, அவர் மாற்றப்படுவார். அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருவது தான், பணி நிரவலுக்கு காரணம் என, கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர், அண்ணாமலை கூறியதாவது:ஆசிரியர் நியமனத்தில், ஆட்சியாளர்களுக்கு தெளிவான கொள்கை இல்லை. ஒவ்வொரு ஆண்டும், கணிசமான அளவுக்கு, ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இந்த பணியிடங்களை, உடனுக்குடன் நிரப்பி விடுகின்றனர். இதன்மூலம், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் குறையாமல், அப்படியே உள்ளது.ஆனால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. அதிகாரிகளிடம் கேட்டால், 'இல்லவே இல்லை... கடந்த ஆண்டை விட, மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது' என, ஏதாவது ஒரு புள்ளி விவரங்களை தருவர்.மாணவர்கள் எண்ணிக்கை குறைவது தான், உபரி ஆசிரியர் வருவதற்கு காரணம். அதிகாரிகள் வாதப்படி, மாணவர் எண்ணிக்கை அதிகரித்தால், உபரி ஆசிரியர் என்ற பிரச்னையே வராதே? பின், எப்படி வருகிறது?ஒரு பக்கம், தனியார் பள்ளிகளை, அரசே ஊக்கப்படுத்துகிறது. புதிய, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், புற்றீசல்போல் வருகின்றன. மெட்ரிக் பள்ளிகளும், புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. அந்த பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும், 'ஜெட்' வேகத்தில் எகிறுகிறது. இதற்கு, நேர் மாறான நிலை, அரசு பள்ளிகளில் காணப்படுகிறது. கேள்விக்குறி அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வந்தால், அரசு பள்ளிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். ஆசிரியர் நியமனமும், சந்தேகமாகி விடும். அரசு பள்ளிகளின் தரத்தை வலுப்படுத்தி, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, அண்ணாமலை கூறினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமாண்ட் கூறியதாவது:கடந்த, 2013 ஆகஸ்ட் இறுதியில் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படியே, தற்போது, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.வரும் ஆகஸ்ட் இறுதி வரை, அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும். எனவே, ஆகஸ்ட் இறுதி நிலவர அடிப்படையிலேயே, உபரி ஆசிரியர்களை கணக்கிட வேண்டும்.கடந்த ஆண்டு, செப்டம்பர், 1ம் தேதி நடத்த வேண்டிய, உபரி ஆசிரியர் கலந்தாய்வை, இப்போது நடத்துவது சரியாக இருக்காது.இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; குறையவில்லை. ஒரு பள்ளியில், கூடுதலாக உள்ள ஆசிரியரை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்றுகிறோம்; அவ்வளவு தான்' என்றது. அரசு செய்ய வேண்டியது என்ன? *உபரி ஆசிரியர் பிரச்னையை தீர்க்க, அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், ஆசிரியர் - மாணவர் விகிதாசாரத்தை குறைக்க வேண்டும். *தற்போது, 1 முதல்,5ம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர், 6 முதல், 8ம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 35 மாணவர், 9, 10ம் வகுப்புகளில், ஒரு ஆசிரியருக்கு, 40 மாணவர் என்ற விகிதாசாரம், நடைமுறையில் உள்ளது. *ஆசிரியர் தேர்வில், தென் மாவட்டத்தினர், அதிகளவில் தேர்வு பெறுகின்றனர். தென் மாவட்டங்களில், காலி பணியிடம் இல்லாததால், வட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். * அதன்பின், யாரையாவது பிடித்து, தென் மாவட்டங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால், வட மாவட்ட அரசு பள்ளிகளில், தொடர்ந்து ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், வட மாவட்டங்களின் கல்வித்தரமும், மோசமாக உள்ளது. *எனவே, ஆசிரியர் நியமனம், ஆசிரியர் - மாணவர் விகிதாசார கொள்கை, வட மாவட்டங்களில், ஆசிரியர் காலி பணியிடம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து, தமிழக அரசு, முழுமையாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  டெட் தேர்வு; விரைவில் மறுசீராய்வு மனு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்...