Posts

Showing posts from June 26, 2022
Image
  புதிதாக 13 ஆயிரத்து 331 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கு முதலமைச்சர் ஒப்புதல் வழங்கி உள்ளார். உடனடியாக 8,000 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் அடுத்தாண்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இல்லம் தேடி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனத்தின்போது முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மேலும், இந்த வருட இறுதிக்குள் தமிழ்நாடு கல்வி கொள்கை உருவாக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ராஜகோபால தொண்டைமானின் திருவுருவச் சிலைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செய்யுங்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதக அம்சங்கள் குறித்தும் எதற்கு நாம் அதனை எதிர்க்கிறோம் என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட
Image
  ஆசிரியர் பணி நியமனம்: இவர்களுக்கே முன்னுரிமை... அமைச்சர் நச் அறிவிப்பு..!!!!! தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனத்தின் போது முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Image
 ' தற்காலிக ஆசிரியர்கள் பணி என்பது அப்பட்டமான உழைப்புச் சுரண்டல்': சீமான் காட்டம் அரசுப் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப 13,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின் மூலம் நிரப்பத் தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக இளைஞர்களின் அரசுப்பணி கனவினை கானல் நீராக்கும் திமுக அரசின் இக்கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார். தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், "தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு மாதம் வெறும் 7500 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்பும் தமிழக அரசின் அறிவிப்பு அப்பட்டமான உழைப்புச் சுரண்டல்.  அரசுப் பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதியத்திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்லித்தான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக அரசின் பச்சைத் துரோகத்தால் ஆசிரியர்களது ஓய்வூதிய பலன் என்பது மிகச் சொற்பமாகக் குறைந்துபோனது.  இந்த நிலையில் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற தமிழ்நாடு அரசின் புதிய
Image
  ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர்க்கை: ஜூலை 4 முதல் விண்ணப்பம் வினியோகம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பயிற்சிப் பள்ளிகளில் 2022-2023ம் கல்வி ஆண்டில் மாணவ மாணவியரை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 4ம் தேதி முதல் http://scert.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி இந்த இணைய தளத்தில் இருந்து தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்த டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பினர், ரூ. 500 செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர் ரூ.250 செலுத்த வேண்டும். தொடக்க கல்வி பட்டயப் படிப்பு என்னும் ஆசிரியர் பயிற்சி பெற விரும்புவோர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், பிசி, பிசி(எம்)
Image
  Tamilnadu staff Vacancies: கவலை அளிக்கும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்; மாணவர்கள் நிலை என்ன? - கல்வியாளர் சங்கமம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அரசுப் பள்ளிகளில் காணப்படுகின்ற ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து கல்வியாளர் சங்கமம் கோரிக்கை வைத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அரசுப் பள்ளிகளில் காணப்படுகின்ற காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதிய முறையில் 13,331 ஆசிரியர்களை நியமித்து கொள்ளும் அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அதனுடைய காலிப் பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் மிகப்பெரிய அளவில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதிலும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது கொரோனா காலகட்டத்தில், பல லட்சங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் வெளியிடப்பட்டிருக்கும் காலிப்பணியிடங்கள் இவற்றை சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை என்ப
Image
  மழலையர் வகுப்பு சேர்க்கை தொடங்குவதில் குழப்பம்: அரசுப் பள்ளிகள் திருப்பி அனுப்புவதாக பெற்றோர் குற்றச்சாட்டு பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டுதல் வழங்காததால், அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்குவதில் குழப்பம் நிலவுகிறது. பள்ளிக்கு வரும் பெற்றோர் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடிகளில் கடந்த 2019-ல்மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்த, அரசு தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கியதால் பெற்றோரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர். இதற்கிடையே, ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, அரசுப் பள்ளிகளில் இயங்கிய மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், 'மழலையர் வகுப்புகள் அரசுப்பள்ளிகளிலேயே தொடர்ந்து இயங்கும். இதற்கு தகுதியான சிறப்புஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்' என்று பள்ளிக்கல்விஅமை
Image
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.! தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் நாளை (ஜூன் 27ம்) வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக காலை 10 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image
  ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - ஜூலை 7, 8 தேதிகளில் நடக்கிறது ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 7, 8 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதியும் நடைபெற உள்ளன. கலந்தாய்வு நடைபெற்ற கடைசி நாளான கடந்த பிப். 25-ம் தேதி நிலவரப்படி உள்ள காலிப் பணியிடங்களுக்குதான் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். 2021-22 உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்கேஜி, யுகேஜி பணிநிரவல் ஆகியவற்றில் சென்ற ஆசிரியர்கள் மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தால், அவர்களின் பெயர்களை நீக்க வேண்டியதில்லை. அதே கல்வியாண்டில் பொது மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களைக் கொண்டே மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான முன்னுரிமைப் பட்டியல் எமிஸ் இணையதளத்தில் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக திருத்தங்களை
Image
  அரசு கல்லூரியில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பம்  தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருப்பதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதில் சேர www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், மேற்கூறிய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உதவி மையங்களை அணுகியும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய 4 நாட்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வரும் ஜூலை 7-ம் தேதி வரை விண்ணப்பப் பதிவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பிறகு கலந்தாய்வு நடத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.