Posts

Showing posts from May 7, 2022
Image
  TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 16: புவியியலில் முழு மதிப்பெண்கள்: எளிதாகப் பெறுவது எப்படி? அரசு அதிகாரிகள் உட்பட எந்தவொரு நபருக்கும் புவியியல் குறித்த அடிப்படை அறிவு தேவை புவி அமைவிடங்கள், இயற்கை உருவாக்கங்கள், அவை உருவான விதம், வாழ்வியலில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை அறிந்துகொள்வதன் மூலமே, ஒருவர் நிர்வாகப் பணியில் சிறப்பாக ஈடுபட முடியும். குரூப் 4 தேர்வுக்குத் தயாராக புவியியல்‌ பாடத்தில் புவி அமைவிடத்தை எப்படிப் படிக்க வேண்டும்? என்பது பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மீதமுள்ள பாடத்திட்டங்களை எப்படிப் படிப்பது என்று ஆட்சிக் கல்வி ஐஏஎஸ் அமைப்பைச் சேர்ந்த செல்வ ராம ரத்னம் கூறியதாவது: ''2. போக்குவரத்து - தகவல்‌ தொடர்பு. 3. தமிழ்நாடு மற்றும்‌ இந்தியாவில்‌ மக்கள்‌ தொகை அடர்த்தி மற்றும்‌ பரவல்‌. 4. பேரிடர்‌ - பேரிடர்‌ மேலாண்மை - சுற்றுச்சூழல்‌ - பருவநிலை மாற்றம்‌. போக்குவரத்து - தகவல்‌ தொடர்பு போக்குவரத்து பகுதியைப் பல பிரிவுகளாகப் பிரித்துப் படிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழிப் போக்குவரத
Image
 "அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செயலி"- அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு! மனிதவள மேலாண்மைத்துறைத் தொடர்பான, அறிவிப்புகளை தமிழக சட்டப்பேரவையில் வெளியிட்டார் நிதித்துறை அமைச்சரும், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும். இந்த செயலி மூலம் தேர்வு அறிவிப்பு, பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் ஆகியவற்றைத் தெரிந்துக் கொள்ளலாம். விண்ணப்பத்தாரர்களின் சான்றிதழ் சரிபார்த்தல் போன்ற பணிகளையும் செயலி மூலம் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப்பணியாளர் குழுமம் இணைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Image
 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது: மொழிப்பாடத்தாள் சற்று கடினம் என மாணவர்கள் கருத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மொழிப் பாடத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். 9.51 லட்சம் மாணவர்கள் தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் மொழிப் பாடத்தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த 4,092 மையங்களில் 9.51 லட்சம் மாணவர்கள் எழுதினர். சென்னையில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இதற்கிடையே, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசினர் ஹோபார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''2 ஆண்டுகள் கழித்து தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் அச்சமின்றி மகிழ்ச்சியுடன் தேர்வெழுதும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய் யப்பட்டுள்ளன'' என்றார். மொ
Image
  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 மாணவர்கள் ஆப்சென்ட் - பள்ளிக் கல்வித்துறை தகவல் இன்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  ஏற்கனவே நேற்று தொடங்கிய பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 32 ஆயிரம் பங்கேற்காத நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கியது.  இதில் 3,936 தேர்வு மையங்களில் 9.55 லட்சம் பேர் தேர்வு எழுதவிருந்த நிலையில், 42,024 மாணவர்கள் ஆப்சென்ட் என தெரியவந்துள்ளது. இவ்வளவு மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்காமல் இருப்பது பள்ளிகளில் இடை நிற்றல் அதிகரிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.