Posts

Showing posts from April 8, 2024
Image
  TNPSC Group 2A Result: நீள் காத்திருப்பு; இன்று வெளியாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி? அரசுத் துறைகளில் உள்ள 6,151 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. ஜனவரியில் தேர்வு முடிவுகள் அதே 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகின. முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களில் 55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள், 2024 ஜனவரி மாதம் வெளியாகின. எனினும் குரூப் 2ஏ தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படாமல் இருந்த
Image
  கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்யும் விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு தேர்வு நடைமுறைகளை 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது, கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை, 12 வாரங்களில் முடிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்களை, உதவி பேராசிரியர்களாக நியமனம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு வரை நடைபெற்றது. ஆட்சி மாற்றம் காரணமாக, இந்த நடைமுறைகள் நிறுத்தப்பட்டு, நான்காயிரம் உதவி பேராசிரியர்கள் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. விரிவுரையாளர்கள் தரப்பில் புதிய அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் 1,146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வது தொடர்பான தேர்வு நடைமுறைகளை, 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
Image
  நீட் தேர்வுக்கு மொபைல் செயலி! பயிற்சி மையம் செல்லாமல், 'நீட்' தேர்வை மாணவர்கள் எழுதும் வகையில், மத்திய அரசு சார்பில் (Mobile app for NEET exam preparation) புதிய செயலி அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வும், ஐ.ஐ.டி., போன்ற இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., தேர்வும் நடத்தப்படுகிறது.  பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இதில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே, விரும்பும் பாடப்பிரிவுகளில் சேர முடியும். இந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி, தனியார் பயிற்சி மையங்களில் படிக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, மத்திய அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி, 'நேஷனல் டெஸ்ட் அப்யாஸ்' என்ற மொபைல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. சோதனை அடிப்படையில் இருந்த இந்தச் செயலி, தற்போது முழுமை பெற்று, மாணவர்களின் முழுமையான பயிற்சிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில், ஜே.இ.இ., தொடர்பாக, 193 மாதிரி தேர்வுகளும், நீட் குறித்து, 204 மாதிரி தேர்வுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மேலும், ஜே.இ.இ. தேர்வு