26 August 2014

TNTET - "SELECT" ஆகாத ஒரு "SENIOR" ஆசிரியரின் மடல் நண்பர்கள்அனைவருக்கும்வணக்கம். நான்selectஆகாதஆசிரியை.நான்என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1.இப்போது உள்ள weightage system அறிவித்த போதே இதனால் பாதிப்பு வரும் என நாம் அறிவோம்.நம்முடைய friends circleலில் இதனைப் பற்றி விவாதித்திருப்போம். அப்போதே TET எழுத உள்ள அனைவரும் சேர்ந்து இந்த weightage system வேண்டாம். யாரும் பாதிக்கப்படாத weightage system பின்பற்ற வேண்டும் என போராட தவறியதின் விளைவு தான் இது. 2. a) 15 , 20 வருடங்களாக posting வாங்காமஎ ன்ன செய்தீர்கள்? உங்ககாலத்தில் வந்த trb exam எழுதி postingபோயிருக்க வேண்டியது தானே? b)இப்போ உள்ள மாணவர்களின் மனநிலையை புரிந்து உங்களுக்கு பாடம் நடத்த தெரியாது என ஏகப்பட்ட comments போடுகிறார்கள். அதற்கு என்னுடைய தனிப்பட்ட பதிலை கூற விரும்புகிறேன். a ) 15 , 20 வருடங்களுக்கு முன்பு வரை seniority அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களை தான் பணி அமர்த்தினார்கள். அதனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு seniority அடிப்படையில் குறைந்த அளவிலேயே பணி நியமனம் செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டில் தான் UG TRB நடத்தபட்டது. மீண்டும் 2005 & 2006ல் UG TRB நடத்தபட்டது. அதன் பின் மீண்டும் seniority அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டது. 2009 கல்வி உரிமை சட்டம் வந்த பின் 2012முதல் தகுதிதேர்வு கட்டாயமாக்கபட்டது. தகுதிதேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றும் இப்போது உள்ள weightage systemதால் பணிகிடைக்காததால் தான் இந்த போராட்டம். இப்போது உள்ள weightage system மாறினால் உடனே அனைவருக்கும் posting கிடைக்கப்போவது இல்லை. ஆனால் இப்போது உள்ள weightage system மாறாத வரை15 , 20 வருடங்களுக்கு முன்பு படித்தவர்கள் TETல்130 மதிப்பெண் எடுத்தால்தான் பணிகிடைக்கும். ஒரு வருடம் காத்திருக்கும் உங்களுக்கே மனம் இவ்வளவு வேதனைபடுகிறது என்றால் 15 , 20 வருடங்களாக காத்திருந்து தகுதிதேர்வு எழுதி அதில்வெற்றி பெற்றும் பணி கிடைக்கவில்லை என்றால் அவர்களின் மனம் எவ்வளவு வேதனைபடும். அவர்களின் நிலையில் இருந்து சிந்தியுங்கள். b) for example 40வயதை கடந்தவர் என்றால் அவர் 39 வயது வரைஉள்ள மனநிலை எப்படி இருக்கும் என அறிந்தவர் அதனால் அவர்களுக்கு மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்த தெரியும். பள்ளியில் driver வேலைக்கு 5வருடபணி அனுபவம் வேண்டும் என கேட்கும்போது ஆசிரியர்களுக்கு அனுபவம் தேவைஇல்லையா?. sofrware company எல்லாவற்றிலும் interviewல் அவர்கள் கேட்கும் கேள்வி experience என்ன? 3. 5 %தளர்வில் seniors benefit அடையவில்லையா? weightage system தால் juniors பாதிப்பு அடையவில்லையா? seniors or juniors நம்முடைய ஒரே தடைக்கல் இப்போது உள்ள weightage system தான். அதை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் அனைவரும் ஆசிரிய குடும்பம். நமக்குள் சண்டை வேண்டாம். THANK YOU BY Princess
விரைவில் 3000 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும்.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தகவல்.சார்பதிவாளர் உட்பட1,064 பணியிடங்களுக்கு கடந்த டிசம்பரில் குரூப்-2 தேர்வு நடந்தது. காலியாகவுள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஒருமாதத்தில் வெளியாகும்.
தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ் பட்டதாரி ஆசிரியர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் பவுசிநேசல் பேகம்(வயது 38). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:- நான், பி.லிட்(தமிழ்)., பி.எட்., படித்துள்ளேன். மேலும், தமிழ் பண்டிட் பயிற்சியும் முடித்துள்ளேன். நான், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவள். கடந்த 18.8.2013 அன்று நடந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் 150-க்கு 94 மதிப்பெண் பெற்றேன். இதைதொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டேன். பின்பு, தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண், ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் ஆகியவற்றை கணக்கிட்டு தகுதியானவர்களின் தற்காலிக பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. மறுத்து விட்டது நான், 100-க்கு 60.86 மதிப்பெண்கள் பெற்றதாகவும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களை பொறுத்தமட்டில் 61.44 கட்-ஆப் மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-2, பி.லிட்., பி.எட்., ஆகியவற்றில் நான் பெற்ற மதிப்பெண்கள், வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எனக்கு, 60.86 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பி.லிட்., பி.எட்., படித்தவர்களும், பி.லிட்.,படித்து தமிழ் பண்டிட் முடித்தவர்களும் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். பி.லிட்., பி.எட்., படித்தவர்களுக்கு பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பி.லிட்., படித்து தமிழ் பண்டிட் முடித்தவர்களுக்கு தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கட்-ஆப் மதிப்பெண் நான், பி.எட்., முடித்துள்ளேன். அதே போன்று தமிழ் பண்டிட்டும் முடித்துள்ளேன். தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆசிரியர் தேர்வு வாரியம் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு நிர்ணயித்துள்ள கட்-ஆப் மதிப்பெண்ணை விட அதிகமாக 62.13 மதிப்பெண்கள் பெற்று விடுவேன். பி.எட்., படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டதால் எனக்கு கட்-ஆப் மதிப்பெண் கிடைக்கவில்லை. எனவே நான், தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக கணக்கில் எடுத்துக்கொண்டு பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. நோட்டீசு இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சேவியர்ரஜினி ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும்,பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே இருக்கும்என்றும் அவர் உத்தரவிட்டார்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...