25 June 2022

 444 இடங்களுக்கு இன்று எஸ்.ஐ. தோ்வு: 2.21 லட்சம் போ் போட்டி




தமிழகத்தில் காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வு சனிக்கிழமை (ஜூன் 25) நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 2.21 லட்சம் போ் எழுதுகின்றனா்.


தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பை, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் வெளியிட்டது. தோ்வு எழுத விரும்பிய இளைஞா்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தனா்.


தோ்வின் முதல் கட்டமாக ஜூன் 25 ஆம்தேதி காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொது அறிவுத் தோ்வும், மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் திறனறிதல் தோ்வும் நடைபெறவுள்ளன. 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை காவல் துறையில் இருந்து தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது.


இந்தத் தோ்வில், முதல் முறையாக தமிழ் திறனறிதல் தோ்வு நடைபெறுகிறது. முதலில் தமிழ் திறனறிதல் தோ்வு விடைத்தாள் திருத்தப்படும். அதில் விண்ணப்பதாரா் 40 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து, தோ்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அவரது பொது அறிவு தோ்வுக்கான விடைத்தாள் திருத்துவதற்காக எடுத்து கொள்ளப்படும். தமிழில் தோ்ச்சி பெறாதவா்கள் எஸ்.ஐ., தோ்விலிருந்து நீக்கப்படுவா்.


இத் தோ்வில் காவல் துறையினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையைச் சோ்ந்த 13,374 போ் தோ்வை எழுதுகின்றனா். தோ்வு ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு குழுமம் டிஜிபி சீமா அகா்வால் தலைமையில் ஐஜி பி.கே.செந்தில்குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் செய்துள்ளனா்.


கண்காணிப்பு கேமரா: இந்தத் தோ்வை 1 லட்சத்து 77,221 இளைஞா்கள், 43,949 இளம் பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 21,213 போ் எழுதுகின்றனா். இதற்காக தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்கள் 39 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு 197 பள்ளி, கல்லூரிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அனைத்துத் தோ்வு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.


அதேபோல கேள்வித் தாள், விடைத் தாள்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் வாகனங்களில், கண்காணிப்புக்காக ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாவட்ட அளவிலும், தோ்வு மையங்களிலும் கேள்வித்தாள், விடைத்தாள்களை வைப்பதற்கு பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.


டோக்கன் முறை: தோ்வா்கள் கொண்டு வரும் கைப்பேசி, பை, உணவு உள்ளிட்ட பொருள்களை பாதுகாப்பாக வைப்பதற்காக தோ்வு மையங்களில் அறைகள் ஒதுக்கப்பட்டு, டோக்கன் வழங்கப்படவுள்ளது. தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வுக் கூட நுழைவுச்சீட்டுடன் அடையாள அட்டைகளான ஆதாா், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அட்டை ஆகியவை ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும். காலை 8.30 மணிக்கு மேல் தோ்வா்கள், தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: சென்னை பெருநகர காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 தோ்வு மையங்களில் 7,080 இளைஞா்களும், 1,506 பெண்களும் என 8,586 போ் தோ்வு எழுதுகின்றனா். இதேபோல ஆவடி மாநகர காவல்துறைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12 தோ்வு மையங்களில் 6,994 இளைஞா்களும், 1,499 இளம் பெண்களும் என மொத்தம் 8,493 பேரும், தாம்பரம் மாநகர காவல்துறைக்குட்பட்ட காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையத்தில் உள்ள பகுதியில் 7,704 இளைஞா்களும்,1,516 இளம் பெண்களும் தோ்வு எழுதுகின்றனா்.

 கல்வியாளர் சங்கமம் சார்பில் அரசுக்கு கோரிக்கை!




தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் நிரப்பப்படாமல் இருந்த காலி ஆசிரியர் பணியிடங்களை தற்போது தமிழ்நாடு அரசு, மதிப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



இது குறித்து கல்வியாளர்கள் சங்கமம் ஆசிரியர் சதீஷ்குமார் கூறியதாவது, 'தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக அரசுப் பள்ளிகளில் காணப்படுகின்ற காலிப் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய முறையில் 13,331 ஆசிரியர்களை நியமித்து கொள்ளும் அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.


அதனுடைய காலிப் பணியிடங்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. 2014ம் ஆண்டிற்குப் பிறகு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மிகப்பெரிய அளவில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதிலும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது கொரோனா காலகட்டத்தில், பல லட்சங்களாக அதிகரித்துள்ளது. ஆனால் வெளியிடப்பட்டிருக்கும் காலிப்பணியிடங்கள் இவற்றை சிறிதும் கணக்கில் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த காலிப்பணியிடங்களை மட்டும் கணக்கில் கொண்டு, தொகுப்பூதிய ஆசிரியர் நியமனங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டுகளிலிருந்து புதிதாகச் சேர்ந்திருக்கக் கூடிய இந்த லட்சக்கணக்கான மாணவர்களுடைய கல்வியை

அரசு கருத்தில் கொள்ளாதது கவலையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.


இந்தத் தொகுப்பு ஊதிய ஆசிரிய நியமனங்கள் வரும் கல்வி ஆண்டை பூர்த்தி செய்யுமென்றால், இந்த கல்வியாண்டு முழுமைக்கும் புதிதாக சேர்ந்திருக்கக்கூடிய இந்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் என்ன? என்பது குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் .


அரசுப் பள்ளிகளின் எதிர்காலம்? பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம்? இங்கு வழங்கப்படுகின்ற கல்வியின் தரம்? இவையாவும் சிறக்க வேண்டுமென்றால் உடனடியாக இந்த தொகுப்பூதிய நியமனங்களில் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக்கக்கூடிய அத்தனை மாணவர்களையும் கணக்கில்கொண்டு காலிப்பணியிடங்களை அறிவிக்க வேண்டும். அந்த இடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அரசுக்கு இந்த நேரத்தில் பணிவுடன் வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கின்றேன்.


அத்துடன் TET மற்றும் TRBல் தேர்ச்சி பெற்று பல்லாண்டுகளாக பணிநியமனம் செய்யாமல் பணிக்காகக் காத்திருக்கும் நபர்களுக்கு பணிநியமனத்தை தொகுப்பூதியம் என்றாலும் அரசே நேரடியாக வழங்கும் வகையில் திட்டமிட வேண்டும். வருங்காலத்தில் அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்' என்றார்.

 தற்காலிக ஆசிரியர்கள் 1,593 பேர் பணி நியமனம் செய்ய முடிவு




கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,593 தற்காலிக ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 13ஆயிரத்து, 331 காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பி, வரும் ஜூலை,1 முதல் பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில், 1,748 காலி பணியிடங்களும் அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,593 ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 906 காலி பணியிடங்கள், பட்ட தாரி ஆசிரியர்களுக்கு, 623 காலி பணியிடங்கள், முதுகலை ஆசிரியர்களுக்கு, 64 காலி பணியிடங்கள் என மொத்தம், 1,593 காலிப்பணியிடங்கள் உள்ளன. இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் எந்தெந்த பள்ளிகளில் உள்ளது என்பதை அறிய அந்தந்த வட்டார கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இதேபோல பட்டதாரி, முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை மாவட்ட கல்வி அலுவலரிடம் தெரிந்து கொள்ளலாம்.காலியாக உள்ள பணியிடங்களில் பள்ளியின் தலைமையாசிரியர், மேலாண்மை குழுவினருடன் இணைந்து தற்காலிகமாக பணி நியமனம் செய்யலாம். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


 ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை தற்காலிக ஆசிரியர்களாக பணியமர்த்தலாம்: பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!




காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் தொடக்கப் பள்ளிகள் தொடங்கி நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4989, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 3188 , முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் வரை ஊதியம் வழங்க பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் ,உதவி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான நபர்களை தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 கள்ளர் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர் நியமனம்: சங்கங்கள் வலியுறுத்தல்



மதுரை: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கள்ளர் சீரமைப்பு ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.



கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீரங்கநாதன் தீனன், முத்துக்குமார் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:கல்வித் துறையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 2022-2023 ல் காலியாக உள்ள 4989 இடைநிலை, 5154 பட்டதாரி, 3188 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரையான சம்பளத்தில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளன. அதற்கான மாவட்டம் வாரி காலிப் பணிடங்களும் வெளியிடப்பட்டுள்ளது.இதுபோல் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் பள்ளிகளிலும் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பள்ளிகளில் வசூலிக்கப்படும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அந்தந்த சி.இ.ஓ.,க்களிடம் தான் ஒப்படைக்கப்படுகிறது. இங்கும் பள்ளி மேலாண்மை குழுக்கள் செயல்படுகின்றன. எனவே கள்ளர் பள்ளிகளிலும் காலிப் பணியிடங்களை வெளியிட்டு, அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! உங்க பெயர் இருக்கா? எப்படி செக் பண்றது? முழு விபரம்!




உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ரூ.1,000 உதவித் தொகையைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மாணவிகள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று எப்படி செக் பண்றது என்பதையும் பார்க்கலாம் வாங்க. தமிழகத்தில் சுமார் 2.70 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இப்போது 2ம் ஆண்டில் திமுக பயணிக்கிறது. அது மட்டும் இன்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது.


அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.


இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும், இந்த உதவித் தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.


இந்நிலையில், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை பெறும் மாணவிகளின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.



அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.


தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை https://studentsrepo.tn, https://schools.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.? தேதி அறிவிப்பு.!! குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும். குரூப் 1 முதல்நி...