7 September 2022

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!




மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு. மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். நீட் இளநிலை மருத்துவர் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அந்தவகையில், தற்போது நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

 விரைவில் மாநில கல்விக்கொள்கை அமைச்சர் பொன்முடி தகவல்



விரைவில் மாநில கல்விக்கொள்கை வெளியிடப்படும் என்று கூறிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என எழுத்துப்பூர்வமாக மத்தியஅரசுக்கு தெரிவித்து விட்டதாகவும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் நடை முறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.


சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, 'நான் கூட பி.யூ.சி படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று நினைத்துதான் படித்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. இன்று தமிழ்நாட்டில் அதிகளவில் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான். பெண்கள் படிக்க இயலாத காலம் இன்று மாறியிருக்கிறது. காலத்துக்கேற்ற வகையில், பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். எந்தத் துறை மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் Inter Disciplinary படிப்புகளைக் கற்க வேண்டியது அவசியம் என்றவர், மதம், மொழி, இனத்தை சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காகவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தனியாக தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர் காலம் முதல் கிறிஸ்தவ மிஷனரிகள்தான் பலரையும் படிக்க வைத்து வருகின்றனர். சிறுபான்மை சமுதாயமும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பதே திராவிட மாடல் ஆட்சி என்றார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க, ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், புதுமைப் பெண் திட்டம், 7.5% இட ஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


தமிழ்நாட்டில், 'தாய்மொழி தமிழும், சர்வதேச மொழியான ஆங்கிலமும் இருக்கும்போது பிற மொழிகள் எதற்கு? மூன்றாவதாக இன்னொரு மொழியை படிக்க வேண்டுமென்றால் தாராளமாக படித்துக் கொள்ளலாம். ஆனால் அதை கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும். என்றவர்,


பள்ளிகளில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அப்படி பொதுத்தேர்வு கொண்டு வந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். 10, 12-ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு இருந்தால் போதுமானது. எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளோம். மத்திய கல்வித்துறை இணையமைச்சர் என்பதால், சுபாஷ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை' எனத் தெரிவித்தவர், விரைவில் தமிழ்நாட்டின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்றார்.

 NEET results will be announced today : இன்று வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள். மேலும் மதிப்பெண்களின் செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு



தேசிய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் (medical courses including MBBS, BDS)உள்ளிட்ட இளநிலை மருத்துவப் கல்விகளுக்கு தேசிய தகுதியை காண்பதற்கான நுழைவு தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைகள் நடைபெறுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது.


அதன்படி நிகழாண்டு நீட் தேர்வு தேசிய அளவில் 497 நகரங்களில் 3,570 மையங்களில் நடைபெற்றது (The NEET exam was held at 3,570 centers in 497 cities nationally). இந்த தேர்வை 17.78 லட்சம் பேர் மாணவர்கள் பங்கு கொண்டு தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1.16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வில் கலந்து கொண்டனர். விடைக் குறிப்பு தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள்கள் ஆக. 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது.


இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப் படுகிறது. மாணவர்கள் மதிப்பெண் விவரங்களை http://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் பொறியியல் கல்விக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு செப். 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. கர்நாடகத்தில் 1.19 லட்சம் பேர் நீர் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். கேரள மாநிலத்தில் 1.16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீர் தேர்வை எழுதி உள்ளனர்


நீட் தேர்வு 2022 முடிவுகளை இணையதளங்களை பதிவிறக்கம் செய்ய

NTA NEET 2022 முடிவுகளைப் பதிவிறக்குவதற்கான NTA அதிகாரப்பூர்வ இணையதளங்கள்,


Neet.nta.nic.in


Ntaresults.nic.in


Nta.ac.in


மதிப்பெண்களின் செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு:


நீட் மதிப்பெண்கள் தற்போதைய கல்வி அமர்வுக்கு மட்டுமே செல்லுபடியாகும், அல்லது ஒரு ஆண்டு, இந்திய கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் போது. இருப்பினும், சர்வதேச கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, NEET UG 2022 மதிப்பெண்களின் செல்லுபடியாகும் காலம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.



  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...